close
Choose your channels

மன்னிப்பு கேட்டால் ஒரு லட்சம் மணியார்டர்: சூர்யாவுக்கு பாமக பிரமுகர் அறிவிப்பு!

Friday, November 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் அனுப்பப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சேகர் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாமகவினர் கூறி வருகின்றனர் என்பது பார்த்து வருகிறோம். ஏற்கனவே சித்தமல்லி பழனிச்சாமி என்பவர் சூர்யாவை உதைத்தால் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பாமக மாநில பொதுச் செயலாளர் சேகர் அவர்கள் இன்று பேட்டி அளித்தபோது ’சூர்யாவின் வீட்டிற்கு 5 போலீஸ் பாதுகாப்பு போட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், தமிழகத்தில் சூர்யா படம் வெளியாகும் போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழகத்தில் அமைதி நிலவவும் கலவரத்தை தடுக்கவும் சூர்யா வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு அவர் மன்னிப்பு கேட்டால் என்னுடைய சார்பாக ஒரு லட்ச ரூபாய் சூர்யாவுக்கு மணியாடர் அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment