கமல்ஹாசனின் இந்து தீவிரவாத பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் பேசினார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு அவரது திரையுலகில் இருந்தும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது

மேலும் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கவும், அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் கமல் மீது கரூர் காவல்நிலையத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கமல்ஹாசன் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பிரதமர் மோடி கமலின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலளித்துள்ளார். அவர் இதுகுறித்து, 'எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது’என்று கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும் அப்படி ஒரு தீவிரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

More News

பெண்ணின் கர்ப்பப்பையில் பைக்கின் உதிரிபாகம்! கணவர் கைது

பெண்ணின் கர்ப்பப்பையில் 6 இன்ச் அளவிற்கு பைக்கின் உதிரிப்பாகம் ஒன்று இருந்ததை அடுத்து அவருடைய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பணி முடிந்துவிட்டது: 'மிஸ்டர் லோக்கலை' ஒப்படைத்த இயக்குனர்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில்

நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா! ஒரே நாளில் இரு படங்களும் ரிலீஸ்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கொலையுதிர்க்காலம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் மற்றும் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

சாமியாராக மாறிவிட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்!

தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஓமக்குச்சி நரசிம்மன். 1946ஆம் ஆண்டு 'ஒளவையார்' என்ற படத்தில் அறிமுகமாகி

அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு: கைது செய்யப்படுவாரா?

இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசிய பேச்சு நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரவக்குறிச்சியில் இன்று கமல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.