கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மோடி, ராகுல்காந்தி சென்னை வருகை: 

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

திமுக தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை காலமானார். திமுகவின் உதயசூரியனாக இருந்த கருணாநிதியின் மறைவால் அக்கட்சியினர் மிகுந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நாளை சென்னை வரவுள்ளனர். இருவரும் கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

அதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்னும் சற்று நேரத்தில் சென்னை வந்தடைவார் என்றும் அவர் இன்று மாலையே கொல்கத்தாவில் இருந்து கிளம்பிவிட்டார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.