பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.. கணவரின் முக்கிய வேண்டுகோள்..!

  • IndiaGlitz, [Thursday,May 02 2024]

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானதை அடுத்து அவரது கணவர் வேண்டுகோள் விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி பாடகி உமா ரமணன், இசைஞானி இளையராஜாவின் இசையில் ஏராளமான பாடலை பாடியுள்ளார். குறிப்பாக ’நிழல்கள்’ படத்தில் ’பூங்கதவே தாழ் திறவாய்’ ’மூடுபனி’ திரைப்படத்தில் ’ஆசை ராஜா’, ‘நண்டு’ திரைப்படத்தில் ’மஞ்சள் வெயில் மாலை’, ’பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தில் ’ஆனந்த ராகம்’ ’தூறல் நின்னு போச்சு’ திரைப்படத்தில் ’பூபாளம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடியுள்ளார்

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சுமார் 8 மணிக்கு உமா ரமணன் காலமானதாக தெரிகிறது. அவருக்கு வயது 72.

இந்த நிலையில் உமா ரமணன் மறைவு குறித்து அவரது கணவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது மனைவி 72 வயதில் இறைவனை சேர்ந்து விட்டார். மே ஒன்றாம் தேதி இரவு 7. 45 இந்த மாதிரி நடக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை, எனது மகனும் எதிர்பார்க்கவில்லை.

பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் நான் கேட்டுக்கொள்கிறேன், பிரவைசி காரணமாகவும், இது மறைந்த உமா ரமணன் வேண்டுகோளாக இதை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்