ஸ்ரீதேவி மரணத்திற்கு காரணம் என்ன? தோழி கூறும் திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 54 வயதிலும் 40 வயது பெண் போல் இளமையான தோற்றத்தில் இருந்த ஸ்ரீதேவிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு அனைவரையும் அதிர்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் சஞ்சய்கபூர், 'இதுவரை ஸ்ரீதேவிக்கு மாரடைப்பே வந்ததில்லை என்றும், அவருடைய மரணத்திற்கு அவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகளும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை ஸ்ரீதேவியின் நெருங்கிய தோழி பியூஷ் கங்குலி அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீதேவி தொடர்ச்சியாக பல அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டார். இயற்கையிலேயே நல்ல அழகியான ஸ்ரீதேவி, இயற்கை அழகில் நம்பிக்கை கொள்ளாமல் இளமையாக தன்னை காட்டிக்கொள்ள அவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகளே அவரது முடிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம். அறுவை சிகிச்சைகளை அவர் தவிர்த்திருந்தால் அவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

ஸ்ரீதேவியின் மரணம் பெண்களுக்கு ஒரு பாடம் என்றும், செயற்கையான சைஸ் ஜீரோ உடலமைப்பை விட இயற்கையான அழகே அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்

More News

கடந்த வார திரைப்படங்களின் வசூல் நிலவரம்: ஒரு பார்வை

கடந்த வாரம் தமிழில் கேணி, 6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த படங்களின் வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

ஜோதிகாவின் நாச்சியார்: ரூ.2 கோடியை நெருங்கிவிட்ட சென்னை வசூல்

முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஸ்ரீதேவி உடல் இந்தியா வர தாமதம் ஏன்?

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று முன் தினம் இரவு துபாயில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு இந்திய திரையுலகையே உலுக்கியது.

என் கனவு பாத்திரம் 'மயிலு'க்கு உயிர் கொடுத்தவர் ஸ்ரீதேவி: பாரதிராஜா

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் என இரண்டு ஸ்ரீதேவி நடித்த படங்களை இயக்கிய பாரதிராஜா, அவருடனான தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:

ஸ்ரீதேவியின் மலரும் நினைவுகள் குறித்து சிவகுமார்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு இந்தியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஸ்ரீதேவியுடன் மூன்று படங்கள் நடித்த பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவரது மறைவு குறித்து கூறியதாவது: