திருமணம் குறித்து நடிகை சாட்னா டைடஸ் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,September 17 2016]

விஜய் ஆண்டனி நடித்த வெற்றி படமான 'பிச்சைக்காரன்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை சாட்னா டைடஸ் கடந்த வாரம் பிரபல விநியோகிஸ்தர் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கார்த்தி-சாட்னா டைடஸ் ஆகியோர் விளக்க அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கார்த்திக், சாட்னா டைடஸ் ஆகிய நாங்கள் இருவரும் மனதார காதலித்து இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
வரும் ஜனவரி 2017ல் எங்கள் இரு குடும்பங்களும் சுற்றமும் நட்புறவுகளும் கூட பெருமதிற்பிபுக்குரிய பத்திரிகையாளர்கள் உங்கள் ஆதரவுடன் பிரமாண்டமான முறையில் எங்கள் திருமணம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றென்றும் உங்களின் அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் கோரும் கார்த்தி-டைடஸ்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

'கொடி' இசை வெளியீடு எப்போது? தனுஷ் தகவல்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் தனுஷ் 'பவர் பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார்.

விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி-நேரம்

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' சமீபத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' படத்திற்கு மூன்று மாநிலங்களிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யாவின் 36வது படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்

சூர்யா நடித்து வரும் 34வது படமான 'எஸ் 3' படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும், அவருடைய அடுத்த படமான 35வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் நாம் அறிந்ததே.

சீனுராமசாமியின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றதுடன் ஊடகங்களின் பாராட்டுக்களையும் பெற்றது.

சமுத்திரக்கனியின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் நாயகி

சமுத்திரக்கனி நடித்து தயாரித்து இயக்கிய 'அப்பா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடு 100வது நாளை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறது.