மகேஷ்பாபுவின் அம்மாவாக ‘பிச்சைக்காரன்’ நடிகை

  • IndiaGlitz, [Sunday,July 24 2016]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதும், வாஸ்கோ-ட-காமா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் நாயகியாக ராகுல் ப்ரித்திசிங் மற்றும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தை ரிலையன்ஸ், லியோ புரொடக்ஷன்ஸ், மகேஷ்பாபுவின் சொந்த நிறுவனமான எம்.பி.என்டர்டெய்மென்ட், முருகதாசின் சொந்த நிறுவனம் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ஆகிய ஐந்து நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் மகேஷ்பாபுவின் அம்மாவாக நடிக்கும் நடிகை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' படத்தில் விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்த தீபா ராமானுஜம் தற்போது வாஸ்கோ-ட-காமா படத்தில் மகேஷ்பாபுவின் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழை விட தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகி தீபாவின் நடிப்பிற்கு பெரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனுக்காக ரசிகர்களின் வித்தியாசமான வேண்டுதல்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் மாடிப்படியில் இருந்து கிழே விழுந்து காயமடைந்து தற்போது சிகிச்சைக்கு பின்னர் ஓய்வு எடுத்து வருகிறார்

பிரிட்டிஷ் படத்தில் ஒப்பந்தமாகிய ரஜினி-விஜய் நாயகி

சமீபத்தில் வெளியான இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவரும், தற்போது ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் '2.0' படத்தின் நாயகியுமான எமிஜாக்சன் பிரிட்டிஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

'கபாலி' கிளைமாக்ஸ் திடீர் மாற்றமா? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதியில் வரும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் ரஜினி ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டு வந்தது.

மணிரத்னம் படத்தில் இணைந்த பரதநாட்டிய நடிகை

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படங்களில் நாயகன், நாயகியை தவிர சப்போர்ட்டிங் நடிகர்களாக ஒருசில பிரபலங்கள் நடித்து வருவதை பார்த்து வருகிறோம்

அன்னை தமிழ்நாட்டில் அனைவருக்கும் ரஜினி சொந்தம். கூறியது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தை நேற்றைய முதல் நாளில் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார்கள் என்பதை பார்த்தோம். கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகமே நேற்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு 'கபாலி'யை