மகேஷ்பாபுவின் அம்மாவாக ‘பிச்சைக்காரன்’ நடிகை

  • IndiaGlitz, [Sunday,July 24 2016]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதும், வாஸ்கோ-ட-காமா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் நாயகியாக ராகுல் ப்ரித்திசிங் மற்றும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தை ரிலையன்ஸ், லியோ புரொடக்ஷன்ஸ், மகேஷ்பாபுவின் சொந்த நிறுவனமான எம்.பி.என்டர்டெய்மென்ட், முருகதாசின் சொந்த நிறுவனம் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ஆகிய ஐந்து நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் மகேஷ்பாபுவின் அம்மாவாக நடிக்கும் நடிகை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' படத்தில் விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்த தீபா ராமானுஜம் தற்போது வாஸ்கோ-ட-காமா படத்தில் மகேஷ்பாபுவின் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழை விட தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகி தீபாவின் நடிப்பிற்கு பெரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.