முறிந்த காதல்… இளம்பெண்ணின் அசால்ட் செயலுக்கு மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்!

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

காதல் முறிந்த நிலையில் கையை அறுத்துக் கொள்வது, தற்கொலை செய்து கொள்வது போன்ற மடத்தனமான காரியங்களை செய்து கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இளம்பெண் ஒருவர் வித்தியாசமான ஒரு காரியத்தை செய்து மற்றவர்களையும் ஆச்சர்யப்பட வைத்து இருக்கிறார்.

தெற்கு கலிபோர்னியா நகரான லாஜ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் Kessie yeung(23). கொரோனா நேரத்தில் இவருடைய காதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த மனிதரைப் பற்றிய எந்த நினைவுகளும் எனக்கு இருக்கக்கூடாது என முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக கலிபோர்னியாவில் இருந்து தென்கொரியாவிற்கு கிட்டத்தட்ட 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து காதலர்களாக இருந்தபோது ஏற்படுத்திய தங்களது காதல் நினைவுச் சின்னத்தை சுக்கு நூறாக உடைத்து இருக்கிறார்.

இந்தச் செயல்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பலரையும் ஆச்சர்யப்பட வைத்து இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கேசி தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள நம்சன் டவருக்கு தனது காதலரோடு சென்று இருக்கிறார். மேலும் தங்களது காதலுக்கு அடையாளமாக (லவ் லாக்) ஒரு பூட்டை வாங்கி மாட்டி இருக்கிறார்.

தற்போது தனது காதல் முறிந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து தென்கொரியாவிற்கு 5,953 கிமீ பயணம் செய்து நம்சன் டவரில் தொங்கிய ஆயிரக்கணக்கான பூட்டுகளுக்கு மத்தியில் தனது பூட்டை தேடி கண்டுபிடித்து உடைத்தச் சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இந்த பயணம் முழுவதையும் கேசி வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். இதைப் பார்த்த நெட்டிசகன் “நான் கூட பிரான்சில் ஒன்றை விட்டு விட்டு வந்து விட்டேன்“, “இதொரு குயின் செயல்“ என்பது போன்ற கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் கேசியின் இந்த வீடியோவிற்கு 5 மில்லியன்களைத் தாண்டி லைக்ஸ் குவிந்து வருகிறது.

More News

கோவை நகரத்திற்காக 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டிய அமெரிக்க தமிழர்!

கோவையில் மெடிக்கல் கல்லூரியில் படித்து தற்போது அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ராஜேஷ் ரங்கசாமி என்பவர் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் மற்றும்

கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கின் விசாரணையில் முக்கிய உத்தரவை மதுரை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மே 10ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள்

திரையுலகின் முன்னணி பி.ஆர்.ஓ திடீர் மறைவு: அதிர்ச்சியில் திரையுலகம்!

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிஆர்ஓவாக இருந்து வந்த பிஏ ராஜூ அவர்கள் திடீரென காலமானது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கோவிட் -ஆல்  உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம்...! வடமாநில அரசு அறிவிப்பு...!

கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.