'பேட்ட' நடிகரின் திருமணத்தில் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’பேட்ட’ திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர் மணிகண்டன் ஆச்சாரி. இவர் மலையாளத்தில் பிரபல நடிகர் என்பதும் சமீபத்தில் வெளிவந்த ’கம்மாட்டிபாடம்’ என்ற மலையாள படத்தில் இவர் சிறப்பாக நடித்ததற்காக மாநில விருதைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மணிகண்டன் ஆச்சாரிக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற இருந்தது. மிகவும் பிரம்மாண்டமாக அனைத்து திரையுலக பிரபலங்களையும் அழைத்து திருமணத்தை நடத்த மணிகண்டன் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் கணக்கில் கொண்டு தனது திருமணத்தில் திடீர் மாற்றம் செய்துள்ளார்.

ஏப்ரல் 26ஆம் தேதி திட்டமிட்டபடி திருமணம் நடக்கும் என்றும் ஆனால் இந்த திருமணம் ஆடம்பரமின்றி இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மிக எளிமையாக நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். தற்போது இருக்கும் சூழலில் தனக்கு இருக்கும் சமூக பொறுப்பு காரணமாக திருமண விழாவில் கூட்டம் கூட்ட விரும்பவில்லை என்றும், திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்து இருப்பதாகவும் இதற்கு மணமகள் வீட்டாரும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மணிகண்டன் ஆச்சாரியின் இந்த முடிவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

More News

இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்: பிக்பாஸ் நடிகையின் கொரோனா விழிப்புணர்ச்சி வீடியோ

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

144 தடை உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை: ராணுவத்தை வரவழைக்கவிருப்பதாக முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியில் நேற்றில் இருந்தே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

சென்னையில் மேலும் 3 கொரொனா நோயாளிகள்: மொத்த எண்ணிக்கை 15 ஆனது

கொரோனா வைரஸால் நேற்று மூவர் தாக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனா தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்த நிலையில் தற்போது சென்னையில் மட்டும் மேலும் மூவர் கொரோனாவால் தாக்கப்பட்டிருப்பது

டாஸ்மாக் கடைகளில் வரலாறு காணாத கூட்டம்: 8 நாட்களுக்கும் சேர்த்து வாங்கும் குடிமகன்கள்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இன்று மாலை 6 மணியிலிருந்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. காய்கறி, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவை

ஆபத்தான நிலையில் மதுரை கொரோனா நோயாளி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருந்த நிலையில் நேற்று மேலும் மூவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக