close
Choose your channels

மறைந்த பீட்டர்பால் வீட்டில் கட்டுக்கட்டாக பணமா? உறவினர்கள் ஆச்சரியம்..!

Monday, May 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட பீட்டர் பால் வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணத்தை அவருடைய உறவினர்கள் எடுத்ததாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் என்று கூறப்படும் பீட்டர் பால் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதன் காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சையின் பலன் இன்றி காலமானார் என்றும் கூறப்பட்டது. பீட்டர் பால் மறைவுக்கு வனிதா தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு செய்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பீட்டர் பால் மறைவிற்கு பின்னர் அவரது உறவினர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு கட்டு கட்டாக பணம் இருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர். பீட்டர் பால் குடிப்பழக்கம் கொண்டவராக இருந்தாலும் அவர் திறமையாக கிராபிக்ஸ் பணிகளை செய்வதில் வல்லவர் என்றும் அதன் மூலம் அவர் ஏராளமான பணத்தை சம்பாதித்தார் என்று கூறப்படுகிறது.

தான் சம்பாதித்த பணத்தை தனது முதல் மனைவி எலிசபெத் மற்றும் தனது மகனுக்கு சேர்த்து வைத்திருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment