நிரந்தர Work from Home வேலைக்கு ஆகாது!!! மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO கருத்து!!!

  • IndiaGlitz, [Thursday,May 21 2020]

 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில மாதங்கள் உலகமே முடங்கி கிடந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப ஜம்பவான்களான பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து வேலைப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும் கொரோனா பரவல் குறைந்த பாடில்லை. இந்நிலையில் எப்போது கொரோனா ஊரடங்கு முடியும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் எழுந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த முடியாது, கொரோனாவோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது போன்ற கருத்துகளையும் அதிகாரிகள் சொல்லத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் சற்று அகலக்கால் வைத்து, தங்களது பணியாளர்களை “நிரந்தரமாக வீட்டில் இருந்து, வேண்டுமானாலும் பணி செய்து கொள்ளுங்கள்” என அறிவுறுத்தி இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தின் செயல் அதிகாரியான ஜாக் டார்சி நிர்வகிக்கும் இன்னொரு நிறுவனமான square நிறுவனத்திற்கும் இதே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து, நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, “நிரந்த Work from home என்பது பணியாளர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அவர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றுவது நல்லதல்ல” என்று கருத்துத் தெரிவித்து உள்ளார். மேலும், “பணியிடங்களில் ஒருவருக்கு ஒருவர் பழகும் தன்மையில் இருந்து அவர்கள் விலக்கப் படுவதார்கள். கூட்டுணர்வு புரிதலுடன் வேலை பார்க்கும் அனுபவம் இல்லாமல் போய்விடும். இதனால் மற்றவர்களிடம் எப்படி பழகுவது என்பது போன்ற அடிப்படைகளும் தெரியாது. அவர்கள் சமூகத் தொடர்பில் இருந்து அவர்கள் விலக்கப்படுவார்கள். இது போன்ற பிரச்சனைகளால் வீட்டில் இருந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்காது” எனத் தெரிவித்து உள்ளார். அதோடு வீடியோ கான்பிரஸ் போன்ற செயல்பாடுகளால் முழுமையான புரிந்துணர்வும் ஏற்படாது. அது நேரில் இருந்து கற்றுக் கொள்வது போன்ற உணர்வை ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

More News

எதுவுமே உண்மையில்லை: 'சுல்தான்' படம் குறித்து விளக்கமளித்த எஸ்.ஆர்.பிரபு

கார்த்தி நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நேரத்தில் திடீரென கொரோனா வைரஸால்

தமிழகத்தில் இன்றும் 700க்கும் மேல் கொரோனாவால் பாதிப்பு: சென்னையில் வழக்கம்போல் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு .

நான் இறந்தபிறகு என் உடலையாவது சொந்த ஊருக்கு எடுத்து செல்லுங்கள்: துபாயில் தவிக்கும் தமிழ் இளைஞர்

நான் இறந்த பிறகாவது என்னுடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று துபாயில் தவித்து வரும் தமிழ் இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றை சமூக தளத்தில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மியா மால்கோவாவுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்தேன்: ராம்கோபால் வர்மா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது

மனைவி சந்தேகப்படுறாங்க.. கூகுள் மேப் மீது போலீசில் புகார் அளித்த கணவர்

தான் செல்லாத இடங்களையெல்லாம் கூகுள் மேப் காண்பிப்பதாகவும், அதனால் தனது மனைவி சந்தேகப்படுவதாகவும் இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு கூகுள் நிறுவனம்