சோசியல் டிஸ்டன்ஸ் புரியலையா..?! ஈரோடு மக்களை பாருங்கள்.

உலகம் முழுக்க 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸானது தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இப்போது வரை தொற்று ஏற்பட்டுள்ளவர்களை பிரித்து மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

முதல் கட்டமாக 21 நாட்கள் நாடு முழுவதும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமான தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வரும் மக்கள் காவல் துறையினரால் கண்டித்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். நோயானது பரவாமல் தடுப்பது நம்மிடம் மட்டுமே உள்ளது. நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு சோசியல் டிஸ்டன்ஸ் என அழைக்கப்படும் சமூகத்திலிருந்து விலகியிருப்பதனை பின்னபற்ற வேண்டும்.

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் மக்கள் எப்படி தள்ளி தள்ளி நிற்கிறார்கள் பாருங்கள். இதைத் தான் நாம் அனைவருமே பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு வெளியில் சென்றாலும் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். நிச்சயம் இந்த நிலைமை மாறும். இந்த நோயை விரட்டிவிட்டு நாம் ஒருவரோடு ஒருவர் கை கொடுத்துக்கொள்ளும் காலம் வரும். அதுவரை தனித்திருந்து மற்றவர்களுக்கு உதவி செய்வோம். உடலால் பிரிந்திருந்தாலும் மனதால் இணைவோம்..!

More News

சூழ்நிலையை பார்த்தால் ஏப்ரல் 9ல் நடக்காது போல் தெரிகிறது: யோகிபாபு

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திடீரென திருமணம் செய்தார். அவருடைய குலதெய்வம் கோவிலில் அவருடைய நெருங்கிய உறவினர்கள்

இந்தியா முழுவதும் ஆணுறை விற்பனை அதிகரிப்பு: மருந்து கடைக்காரர்கள் ஆச்சரியம்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வேலையின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வீட்டிலேயே முடங்கி இருப்பதை அடுத்து ஆணுறை விற்பனை திடீரென அதிகரித்துள்ளதாக

குஜராத்தில் அடுத்தடுத்த நாட்களில் இருவர் மரணம்: பெரும் பரபரப்பு

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் 85 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனாவை ஒழிக்க உதவிய தல அஜித்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Work from Home??? வீட்டில் இருந்தபடி சிறப்பாக பணியாற்றுவது எப்படி???

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.