கொரோனாவால் குணமானவரை ஊருக்குள் அனுமதிக்காத பொதுமக்கள்: புதிய தீண்டாமையா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்த ஆந்திர டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு திரும்ப இருப்பதை கேள்விப்பட்டு பொதுமக்கள் போராட்டம் செய்து அந்த நபரை ஊருக்குள் அனுமதிக்காத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததை அடுத்து அவர் முற்றிலும் குணமாகி விட்டதாகவும் அவர் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் கொரோனாவால் பாதித்த நபர் தங்கள் ஊருக்குள் நுழைய கூடாது என்று அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மீண்டும் அந்த நபர் பழனி அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இதுகுறித்து போராட்டம் செய்த பொதுமக்களிடம் அரசு உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்றும் வீட்டிற்குள் அவர் வந்தாலும் இன்னும் சில வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார் என்றும் எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று எடுத்துக் கூறினார். இதனை அடுத்து அந்த நபரை ஊருக்குள் வர பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர். கொரோனாவால் மக்களிடையே புதிய தீண்டாமை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

தமிழகத்தில் இன்று மேலும் அதிகரித்த கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை சுகாதாரத்துறை தினமும் தெரிவித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக 50க்கும் குறைவாகவே கொரோனாவால்

ஜஸ்டின் பீபர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட 'கோமாளி' நடிகை

ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பு இல்லாத நடிகர் நடிகைகள் பலர் வித்தியாசமான வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்களை

5 மாநிலங்கள், 2700கிமீ: மகனை பார்ப்பதற்காக பயணம் செய்த தாய்!

சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆந்திராவில் சிக்கித் தவித்த தனது மகனை மீட்பதற்காக 1400 கிமீ தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து அழைத்து வந்தார் என்பதை பார்த்தோம்

அமெரிக்காவை கூட காப்பாற்றிவிடலாம், ஆனால் இந்தியாவை... பார்த்திபன்!

தமிழகம் உள்பட இந்தியாவில் மே 3வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் ஒருசில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்படலாம்

சாலைகளில் உறங்கும் சிங்கங்கள்!!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளில் கூட தற்போது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.