ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கைது செய்யப்பட்டபோதே தமிழகத்தில் அடுத்த கைது ப.சிதம்பரம் தான் என்று பேட்டி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார். அவர் கூறியபடியே இன்று ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பர்ம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கார்த்திக் சிதம்பரம் மட்டுமின்றி ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும், மத்திய அமைச்சராக இருந்தபோது ப.சிதம்பரம் கையெழுத்து போட்டதால் இந்த இந்த முறைகேடு நடந்துள்ளதாகவும், சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணையில் கார்த்திக் சிதம்பரம் பொய் கூறியுள்ளதாகவும் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டதை அடுத்து மேலும் பல கைது நடவடிக்கைகள் தொடரும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

கார்த்திக் சிதம்பரம் அதிரடி கைது: அவசரமாக இந்தியா திரும்புகிறார் சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்லின் மகன் கார்த்திக் சிதம்பரம் சற்றுமுன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.

காஞ்சி சங்கராச்சாரியார் என்று அழைக்கப்படும் ஜெயெந்திர சரஸ்வதி அவர்கள் சற்றுமுன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

'சூர்யா 36' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எஸ்.ஆர்.பிரபு

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

என்பார்மிங் முடிந்தது: துபாய் விமான நிலையத்தில் ஸ்ரீதேவி உடல்

துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவி உடல் துபாய் போலீசாரின் அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் முடிந்துவிட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவுதமி சம்பள பாக்கி குறித்து கமல் கருத்து

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், அதற்கான சம்பளத்தை கமல்ஹாசனின் நிறுவனம் தனக்கு தரவில்லை என்றும் சமீபத்தில் கவுதமி புகார் கூறியிருந்தார்.