close
Choose your channels

பவன்கல்யாண்-எஸ்.ஜே.சூர்யா படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Monday, June 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து எஸ்.ஜே.சூர்யா திடீரென விலகிவிட்டதாக கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'இறைவி' நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு தமிழ், மற்றும் தெலுங்கு திரைப்படவுலகில் இருந்து நடிப்பதற்கு அதிகளவு வாய்ப்புகள் குவிந்தன.
இதன் காரணமாக பவன்கல்யாண் படத்தை இயக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து பவன்கல்யானுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த படத்தில் இருந்து எஸ்.ஜே.சூர்யா விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பவன்கல்யாண் படத்தை இயக்க டோலியிடம் தயாரிப்பாளர் சரத்மர்ரார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. டோலி ஏற்கனவே பவன்கல்யாண் நடித்த 'கோபாலா கோபாலா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment