பவன்கல்யாண்-எஸ்.ஜே.சூர்யா படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Monday,June 20 2016]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து எஸ்.ஜே.சூர்யா திடீரென விலகிவிட்டதாக கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'இறைவி' நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு தமிழ், மற்றும் தெலுங்கு திரைப்படவுலகில் இருந்து நடிப்பதற்கு அதிகளவு வாய்ப்புகள் குவிந்தன.
இதன் காரணமாக பவன்கல்யாண் படத்தை இயக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து பவன்கல்யானுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த படத்தில் இருந்து எஸ்.ஜே.சூர்யா விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பவன்கல்யாண் படத்தை இயக்க டோலியிடம் தயாரிப்பாளர் சரத்மர்ரார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. டோலி ஏற்கனவே பவன்கல்யாண் நடித்த 'கோபாலா கோபாலா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தெறி' இந்தி ரீமேக்கில் நடிப்பது யார்? புதிய தகவல்

இளையதளபதி விஜய், சமந்தா நடிப்பில் அட்லி இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் 'தெறி' கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது...

மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தை தயாரிக்கும் 5 பிரபல நிறுவனங்கள்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சோனாக்ஷி சின்ஹா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'அகிரா' படத்தின் இறுதிக்கட்ட...

விஸ்வரூபம் 2' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்...

பிலிம்பேர் விருது-2016. சிறந்த நடிகர், நடிகை யார்? முழுவிபரங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களுக்கான பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது...

'கபாலி'யின் ரகசியத்தை உடைத்த செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று உலக அளவில் பேசப்பட்டாலும் இந்த படம் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை தற்செயலாக நடந்தது...