சிவகார்த்திகேயனின் 'ஊதா கலர் ரிப்பனுக்கு' அடிமையான அண்டை மாநில சூப்பர் ஸ்டார்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இடம்பெற்ற ’ஊதா கலரு ரிப்பன்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக பி, சி சென்டர்களில் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடலுக்கு தான் அடிமை என அண்டை மாநில சூப்பர் ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும், அவருக்கு தென்னிந்திய திரையுலகமே வாழ்த்து தெரிவித்தது என்பதும் தெரிந்தது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் பவன் கல்யாணுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பவன் கல்யாண் ’உங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கு எனது நன்றி. நான் உங்கள் படத்தில் இடம்பெற்ற ’ஊதா கலர் ரிப்பன்’ பாடலுக்கு அடிமை. அந்த பாடலை பலமுறை நான் கேட்டிருக்கிறேன். எத்தனை தடவை கேட்டுள்ளேன் என்று எனக்கே தெரியாது’ என்று கூறியுள்ளார்.

 

பவன் கல்யாணின் இந்த பதிலால் மகிழ்ச்சி அடைந்த சிவகார்த்திகேயன் தனக்கு பதில் அளித்ததற்கு நன்றி என்றும் ஊதா கலர் ரிப்பன் பாடலுக்கு ரசிகர் என்று கூறியதற்கு மிகவும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். ஊதா கலர் ரிப்பன் பாடலுக்கு அண்டை மாநில சூப்பர் ஸ்டாரே ரசிகர் என்ற தகவல் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

திருமண மண்டபமாக மாறுகிறது ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி! பரபரப்பு தகவல்

ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்ட நிலையில் சமீபத்தில் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்பட்டது

ஆன்லைன் வகுப்பில் பிரபலமான டீச்சருக்கு சினிமா வாய்ப்பு: அதன்பின் நிகழ்ந்த விபரீதம்!

ஆன்லைன் வகுப்பின் மூலம் மாநிலம் முழுவதும் பிரபலமான ஆசிரியை ஒருவருக்கு சினிமா வாய்ப்பு வந்த நிலையில் அவர் அந்த சினிமா வாய்ப்பை மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்

நான்கு வருடங்களாக முடங்கி இருக்கும் படத்தை தூசு தட்டும் சந்தானம்: விரைவில் ரிலீஸ்!

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக பதவி உயர்வு ஆனபின் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்ட படங்களில் ஒன்று 'மன்னவன் வந்தானடி'. பிரபல இயக்குனர் செல்வராகவன்

வாட்ஸ் அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்: அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கில் தொங்கி தற்கொலை

தான் யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என வாட்ஸ்அப்பில் கடைசியாக ஒரு ஸ்டேட்டஸை பதிவு செய்துவிட்டு அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பாம்பை அசால்ட்டாக பிடித்து பக்கெட்டில் போட்ட தமிழ் நடிகை: வைரலாகும் வீடியோ 

வீட்டுக்குள் வந்த பாம்பை பிடித்து அதை ஒரு பக்கெட்டில் போட்ட தமிழ் நடிகை ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது