தமிழகத்தின் நிரந்தர முதல்வர் நீங்கள் தான்: எடப்பாடியாருக்கு நடிகர்-அரசியல்வாதி வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட தமிழக பிரபலங்கள் பலரும் முதல்வருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, நீங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும் என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் அவர் மேலும் கூறியதாவது:

தமிழக முதல்வர்‌ மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள்‌ வாழ்த்துகள்‌!

ஐயா வணக்கம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதாவின் நல்லாட்சியை தொடர்ந்து நடத்தி வரும்‌ நீங்கள்‌ தமிழக மக்களின்‌ மனதில்‌ நீங்காத இடம்‌ பிடித்துள்ளீர்கள்‌. அ.தி.மு.கவின்‌ தொண்டனாக தங்களின் வாழ்க்கையை தொடங்கி பல பொறுப்புகளை வகித்துள்ளீர்கள்‌. குறிப்பாக நான்கு முறை சட்டமன்றத்திற்கும்‌ ஒரு முறை பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யபட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளீர்கள்‌.

இன்று தமிழக முதல்வராக ஏழை எளிய மக்கள்‌ குறிப்பாக விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறீர்கள்‌. உங்களின்‌ இந்த பிறந்த நாளில்‌ என்றும்‌ தமிழகத்தின்‌ நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும்‌ என்று என்னுடைய ஜனசேனா கட்சியின்‌ சார்ப்பாக வாழ்த்துகிறேன்‌.இவ்வாறு நடிகர் பவன்கல்யாண் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உணவு உறைவிடம் வழங்க வேண்டும் என்றும் பின்னர் அவர்களை பத்திரமாக சொந்த மாநிலத்திற்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பவன்கல்யாண் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை உடனடியாக முதல்வர் பழனிச்சாமி நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரியல் ஹீரோக்களிடம் ஆட்டோகிராப் வாங்குங்கள்: சூரி வேண்டுகோள்

இன்றைய நிலைகளில் ரியல் ஹீரோக்கள் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தான். எனவே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி அவர்களை கெளரவப்படுத்துங்கள்

ஊரடங்கு விடுமுறையில் தமிழ் கற்கும் பிரபல பாலிவுட் நடிகை!

பிரபல பாலிவுட் நடிகைகள் பலர் தமிழ் திரையுலகில் பிசியாக நடித்து வரும் நிலையில், மொழி தெரியாமல் சில நடிகைகள் கஷ்டப்படுவது உண்டு. அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில்

'பாகுபலி' ரானாவை காதலிக்கும் பெண் தொழிலதிபர் இவர்தான்

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்த ராணா டகுபதி கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலதிபர் ஒருவரை

ரஜினியின் 'அண்ணாத்த' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

ஒரு வருடத்திற்கு இனி தியேட்டரின் நிலை இதுதான்: பிரபல தயாரிப்பாளர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 17ஆம் தேதி ஊரடங்கு வாபஸ் பெற்றாலும் அதன் பின்னரும் திரையரங்குகள் திறப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.