வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு 'மனக்களிம்பு' போடும் பார்த்திபன்

  • IndiaGlitz, [Saturday,December 12 2015]

திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக நடிகர், இயக்குனர் என வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்.பார்த்திபன் மற்ற நடிகர்களிடம் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர். தனது படங்கள், சொந்த வாழ்க்கையில் மட்டுமின்றி வெள்ள நிவாரண பணியிலும் தனது வித்தியாசத்தை நிரூபித்துள்ளார். அனைத்து நடிகர்களும் உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்ககையில் பார்த்திபன் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தண்ணீரில் இறங்கி ப்ளீச்சிங் பவுடரை தெளித்து சுகாரதாரத்திற்கு உதவினார்.

இந்நிலையில் நாளை அதாவது டிசம்பர் 13ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு 'மனக்களிம்பு' (மருத்துவமுகாம்)போட பார்த்திபனின் மனிதநேய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மருத்துவமுகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நல ஆலோசனைகள், இரத்த தான முகாம்கள் மற்றும் ஊக்க உணவுகள் அளிக்கப்படவுள்ளன.

சென்னை வடபழநி கமலா திரையரங்கம் அருகில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் இந்த மனக்களிம்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 044-23651311 மற்றும் 9566049610 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

More News

அஜீத்-விஜய்க்கு கிடைக்காத பெருமையை பெற்ற தனுஷ்

2015ஆம் ஆண்டின் இந்தியாவின் டாப் 100 திரை நட்சத்திரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது...

விஜய் நாயகியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா...

ஐந்து இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் அனுஷ்கா?

'பாகுபலி', 'ருத்ரம்மாதேவி', மற்றும் இஞ்சி இடுப்பழகி' படங்களை அடுத்து அனுஷ்கா தற்போது 'பாகுபலி 2' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்...

வெள்ள நிவாரண நிதி: கார்த்தியிடம் கமல்ஹாசன் கொடுத்த ரூ.15 லட்சம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

'தனி ஒருவன்' இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

சமீபத்தில் 'தனி ஒருவன்' என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஜெயம் ராஜா விஜய்யின் 60வது படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இருந்தார்...