விவேகத்தை விட அஜித் பெரிசு: 'மெர்சல்' சர்ச்சைக்கு பார்த்திபன் பதில்

  • IndiaGlitz, [Tuesday,August 22 2017]

எந்த ஒரு திரைப்படத்தின் விழாக்களிலும் நடிகர், இயக்குனர் பார்த்திபன் கலந்து கொண்டு அவரது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார். அதேபோல் சமீபத்தில் நடந்த தளபதி விஜய்யின் 'மெர்சல் இசை வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.
ஆனால் இந்த விழாவில் அவரது பேச்சு சிரிப்பை வரவழைப்பதற்கு பதிலாக சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் அவர் பேசியதாகவும் விமர்சிக்கப்பட்டது. பொடிமாஸ் செய்யணும்னா முட்டை வேணும், மாஸ் படத்திற்கு விஜய் மட்டும் தான் வேண்டும் என்று சம்மந்தம் இல்லாமல் பேசிய பார்த்திபன், ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு, CM, டிரம்ப் டுவீட் ஆகியவை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவரை பார்த்திபன் பேசிய பேச்சுக்களில் இதுதான் மோசமானது என்று பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து அவர் கவிதை வடிவில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
'காசுக்கு மாரடிக்காத
Mass-ஆன பேச்சுக்கு
மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது
இதுவே முதன்முறை!
வாயார/மனதார வாழ்த்துவது
என் மேடை நாகரீகம்.
அவர் அழைத்தாலும்
தலை நிமிர இப்படி சொல்வேன்.
"வேகத்தை விட விவேகம் பெருசு-ஆனா
விவேகத்தை விட
அஜீத்தே பெருசு!"-நான்
கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால்,
சினிமாவுக்கு மட்டுமே ரசிகன். 'ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?)
வாழப்போறான் விவசாயி'-அதுவே
நம்பிக்கை நிறைந்த என் பேச்சின்
மெரஸலான மெசேஜ்!"
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

More News

ஆகஸ்ட் 26ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து: திடீர் அறிவிப்பு ஏன்?

கடந்த சில நாட்களாகவே ஜிஎஸ்டி உள்பட பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதும், திரையரங்குகள் மூடப்படுவதுமான நிகழ்வுகள் இருந்து வருகிறது.

லதாரஜினி பள்ளி குறித்து நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளியின் கட்டிடத்திற்கு கடந்த சில வருடங்களாக வாடகை தரவில்லை என்று கூறி அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கடந்த 16ஆம் தேதி பூட்டு போட்டார்.

விஜய் சேதுபதி- நயன்தாரா பீரியட் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'கைதி நம்பர் 150' கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று அவருடைய பிறந்த நாள் அன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு வாபஸ்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அதிரடி

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் என மூன்று அணிகள் இருந்த நிலையில் நேற்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் அதிகாரபூர்வமாக இணைந்தது.

புலியுடன் மோதிய 'மெர்சல்' விஜய்யின் துணிச்சல்

கோலிவுட் திரையுலகில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் என்னதான் அழுத்தமான கதை, திரைக்கதை இருந்தாலும் ஹிரோக்கள் ரிஸ்க் எடுத்து நடித்தால் தான் படம் வெற்றி பெறும் என்பது சமீபத்திய வெற்றிப்படங்கள் நிரூபித்துள்ளன.