'டீன்ஸ்' ரிலீஸ் நேரத்தில் திடீரென போலீஸ் புகார் அளித்த பார்த்திபன்.. யார் மீது? என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,July 05 2024]

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், தான் இயக்கிய ’டீன்ஸ்’ என்ற திரைப்படத்தை வரும் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் திடீரென அவர் கோவையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதே நாளில் தான் பார்த்திபன் தனது ’டீன்ஸ்’ படத்தை வெளியிடுகிறார் என்பதும் இந்த படத்திற்கான விளம்பர பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் பார்த்திபன் கோவை காவல் நிலையத்தில் ’டீன்ஸ்’ படத்திற்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணிபுரிந்த சிவப்பிரசாத் என்பவர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ’டீன்ஸ்’ திரைப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை பிப்ரவரி 10 முதல் 20ஆம் தேதிக்குள் முடிந்து தருவதாக சிவபிரசாத் தன்னிடம் கூறியதாகவும் அதற்காக அவர் 68.54 லட்சம் ரூபாய் கேட்ட நிலையில் அவர் ரூ.42 லட்சம் செலுத்தி விட்டதாகவும் ஆனாலும் குறித்த நேரத்தில் அவர் பணிகளை முடிக்கவில்லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

பார்த்திபனின் இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் சிவபிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

More News

அரசியல்வாதிகள் மிரட்டலால் இன்று என் படம் வெளியாகவில்லை.. தமிழ் நடிகர் அதிர்ச்சி தகவல்..!

இன்று வெளியாக இருந்த என்னுடைய படம் அரசியல்வாதிகள் மிரட்டலால் வெளியாகவில்லை என்று  பேட்டி அளித்துள்ளது பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஹிட் படம் உட்பட இன்று முதல் 3 தமிழ் படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் உள்பட 3 தமிழ் படங்கள் மற்றும் சில மற்ற மொழி படங்களும்  இன்று ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ரஜினியின் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. ஆனாலும் ஒரு அதிர்ச்சி தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில் முதல் ஷெட்யூல் வெறும்  4 நாட்கள் மட்டும் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி

வெற்றிமாறன் முயற்சியால் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. நாளை ஒரு இன்ப அதிர்ச்சி..!

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் முயற்சியால் மீண்டும் அவர்கள் இருவரும் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளன.

'சூர்யா 44' படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா? அந்தமான் புகைப்படம் வைரல்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அந்தமான் தீவுகளில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.