பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் இதுதானா? இதுவரை யாரும் தொடாத வித்தியாசமான கதை..!

  • IndiaGlitz, [Tuesday,June 13 2023]

தமிழ் திரை உலகின் வித்தியாசமான நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படம் குறித்த டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் ’ஒத்த செருப்பு’ மற்றும் ’இரவின் நிழல்’ ஆகிய இரண்டு வித்தியாசமான படங்களை இயக்கி இந்திய திரை உலகை திரும்பி பார்க்க வைத்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் TEEN என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் கதை 13 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளின் மன ஓட்டத்தை சொல்லும் கதை அம்சம் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை அம்சத்தை தேர்வு செய்யும் பார்த்திபன் இந்த படத்தில் டீன் ஏஜ் குழந்தைகளின் மன ஓட்டத்தை பதிவு செய்யும் வகையில் கதையை அமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்து கூடுதல் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

பீச்சில் உடலுறவு கூடாது… கடுமையாக எச்சரிக்கும் அளவிற்கு வைரலான சம்பவம்!

ஐரோப்பிய நாடுகளில் ஒனறான நெதர்லாந்தில் ஒரு நகரத்தை ஒட்டியுள்ள கடற்கரைக்கு செல்லும் ஜோடிகள் உடலுறவில் ஈடுபடக் கூடாது, மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும்

'சிட்டாடல்' வெப் தொடரில் நடிக்க சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா? திரையுலகினர் ஆச்சரியம்

நடிகை சமந்தா 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து வரும் நிலையில் இந்த தொடருக்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது திரையுலகினர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

வேற லெவல் சம்பவம் செய்த கார்த்திக் சுப்புராஜ்.. 'ஜிகர்தண்டா 2' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் டெக்னிக்கலாக வேற லெவலில்

5 நிமிடத்தில் ஓகே சொல்லிவிட்டேன்.. பவர்ஸ்டார் படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்து முடித்த ஐந்து நிமிடத்தில் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

மும்பை கடற்கரையில் வீடு வாங்கிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள்… விலை தெரியுமா?

பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்துவரும் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் தம்பதிகள் மும்பை கடற்கரையை ஒட்டி புதிதாக உருவாகிவரும்