பார்த்திபனின் '53ஆம் பக்கம்'.. ரசிகர்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 13 2023]

பார்த்திபன் இயக்கி நடித்த ’ஒத்த செருப்பு’ மற்றும் ’இரவின் நிழல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் கவனத்தைப் பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது அடுத்த படத்தின் டைட்டிலை சரியாக யூகிப்பவர்களுக்கு பரிசு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் ஒரு புத்தகம் விரித்தார் போல் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இதில் டைட்டில் ஒளிந்து இருக்கிறது என்றும் இந்த டைட்டிலை சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு புடவை பரிசு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த திறந்த புத்தகத்தின் 53ஆம் பக்கத்தில் மயில் இறகு ஒன்று இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’53 ஆம் பக்கம்’ என்று சிலர் யூகித்துள்ளனர். மேலும் ஒரு சிலர் ’புத்தகத்தில் ஒரு மயிலிறகு’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து பார்த்திபன் தனது அடுத்தடுத்த டுவிட்டுகளில் கூறியிருப்பதாவது:

ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும். அந்த மாதிரி இந்த டிசைனுக்குள்ள இருக்க திரைப்படத்தோட தலைப்பைக் கண்டுபிடிங்க பாக்கலாம்!

என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும்,அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும்!

“புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக்கவா முடியும்” என கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு… கட்டிகிட்டவங்களுக்கு குடுங்க இல்ல கட்டிக்கப் போறவங்களுக்கு குடுங்க!

என் தலைப்புக்கு பக்கம் பக்கமாய் மிக பக்கமாய் 51-ஆம் பக்கம்,52-ஆம் பக்கம் 53-ஆம் பக்கம் என நெருங்கிவிட்ட தலைப்புகள். ஆனால் கதைக்குள் பொருத்தி நான் இருத்திய தலைப்புடன் உங்களின் யூகம் பொருந்துகிறதா என்று பார்த்துவிட்டு நாளை எனதை அறிவிப்பேன். அதுவரை உங்களின் அறிவுத்திறனை ஆராதிக்கிறேன்.
 

More News

9 மாதங்களுக்கு பின் திருமணம் நடந்ததை பகிரங்கமாக அறிவித்த 44 வயது நடிகை: கர்ப்பமாக இருக்கின்றாரா?

 பிரபல நடிகை ஒருவர் 9 மாதங்களுக்கு பின் தனக்கு திருமணம் நடந்ததை ஆதாரத்துடன் வெளியிட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்துங்க.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு டிஜிபி அறிவுரை

இளைஞர்கள் நன்றாக படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு

ஆடியன்ஸ் வராததால் 'துணிவு' காட்சி கேன்சலா? தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா?

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் நேற்று வெளியாகிய மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது என்பதும் முதல் நாளுக்குரிய காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது தெரிந்ததே.

வருமான வரித்துறையில் இருந்து போன் வந்ததும் பயந்துவிட்டேன்: லோகேஷ் கனகராஜ்

வருமானவரித்துறையினரிடம் இருந்து போன் வந்ததும் பயந்துவிட்டேன் என வருமானவரித்துறை ஏற்பாடு செய்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசினார்.

மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி: 'துணிவு' படம் குறித்து பிரபல இயக்குனர்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.