அடுத்த பிறந்த நாளில் 'உள்ளே வெளியே 2': பார்த்திபனின் கவிதை

  • IndiaGlitz, [Wednesday,November 15 2017]

நடிகர், இயக்குனர் பார்த்திபன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் IndiaGlitz தனது நல்வாழ்த்துக்களை பார்த்திபனுக்கு கூறிக்கொள்கிறது.

தனது பிறந்த நாளையொட்டு பார்த்திபன் ஒரு கவிதை எழுதி அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் பார்த்திபனின் வெற்றி படங்களில் ஒன்றான 'உள்ளே வெளியே 2' திரைப்படம் அடுத்த தனது பிறந்த நாளில் வெளியிட முயற்சிப்பதாகவும், இந்த படத்திற்கான தயாரிப்பாளர்தான் இன்னும் சிக்கவில்லை என்று தனது கவிதையில் தெரிவித்துள்ளார். இதோ இதுதான் பார்த்திபன் எழுதிய கவிதை:

ஆயிரம் அடிக்கும் அடியில்

ஆழ்துளை கலைக்கிணற்றில்

அகழ்வாய்வு கொண்ட

365 திங்களில்

அதிர்ஷடமெனும்

அபூர்வம் கண்டதில்லை நான்!

விதை புதைத்து

சுரை கொண்டதில்லை,

மரம் விதைத்தே

கனி உண்டிருக்கிறேன்.

பல்வேராய்ச்சியில்

பல்பு எரிந்தது போல...

பல்யுக்தி மல்யுத்த முயற்சியில்

நல் முத்துக்களாய்

கைதட்டல்கள் பெறுகிறேன்!

என் படங்களில் சூப்பர்

நட்சத்திரங்கள் நடித்ததில்லை

பிரம்மாண்ட இயக்குநர்களின்

படங்களில் நான் நடித்ததில்லை

இருப்பினும் இயங்குகிறேன்.

இருப்பை சிறப்பாய்

செதுக்கிய சமீபம் KTVI

பிறந்த நாளெனக்கு

14/4/1989(புதிய பாதை)! அடுத்த

பிறந்த நாளென்பது

'உள்ளே வெளியே 2'

வெளியீடும் வெற்றியும்!

தயார்: புதுமை+கமர்ஷியல் கதை.

தயாரிப்பாளர் தான்

முயற்'சிக்கவே' இல்லை!

என் இனிய பாரதி

ராசாவும் இசைய

ராசாவும் இன்றை

இளைஞ ராசாக்களும்

வருந்தி வாழ்த்துவது

தகுதிக்கான உச்சம்

தொடவில்லை என்பது.

எட்டாத ஸ்தூபம்

கிட்டாத ஸ்தானம்

அதற்கான ஸ்தூலம்

அறியவில்லை நானும்.

ஆனாலும் ஓடுகிறேன்

ஆறாமல் தேடுகிறேன்

அண்ணாந்து பார்க்கிறேநென்

விஸ்வரூப உழைப்பின் வியர்வை

சொட்டு சொட்டாய் நுனி

நாவை நனைக்க- உயிர்

கொள்ளும் சினிமா தாகம்

முன்பினும் மூர்க்கமாய்

மூச்சடக்கி பாய்கிறது.

வெற்றிக்கு உற்றோரே

உங்களின் வாழ்த்து

இன்றும் நாளையுமல்ல

இன்றியமையாதது என்றுமே

என்றறிவேன் நானும்

நன்றி'மறவேன்!!!

More News

வைரலாகி வரும் விஷால் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு வீடியோ

நடிகர் விஷால் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பது அறிந்ததே. அவரும் வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

உடுமலை சங்கர் கொலை வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு தமிழகத்தையே குலுங்க வைத்த உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 12ஆம் தேதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவிற்கு சிலை வைத்தால் திறக்க தயார்: பிரபல இயக்குனர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோபி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'அறம்' படத்தை பாராட்டதவர்களே இல்லை என்று கூறலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஊடக விமர்சகர்கள் வரை அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை இந்த படம் பெற்றுள்ளது. 100 வருட தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுகிறது.

விஜய்ன்னு பேரு வச்சாலே சூப்பர் ஆயிடுறாங்க: அண்ணாதுரை ஆடியோ விழாவில் ராதிகா

விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் ஆண்டனி, இயக்குனர் சீனிவாசன், தயாரிப்பாளர் ராதிகா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

சூர்யாவின் அடுத்த படத்தில் '8 தோட்டாக்கள்'' பட நடிகை

ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் நடித்த நடிகை மீரா மிதுனுக்கு சூர்யாவின் அடுத்த படத்தில்