பற்றி எரியும் பாரீஸ்: போர்க்களமான பெட்ரோல் விலை உயர்வு போராட்டம்

  • IndiaGlitz, [Sunday,November 25 2018]

இந்தியாவில் சமீபத்தில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோது சமூக வலைத்தளங்களில் மட்டுமே தங்கள் அதிருப்தியை பொதுமக்கள் தெரிவித்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தால் அந்நாட்டின் தலைநகர் பாரீஸ் போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாரீசில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் இருந்த பொருட்கள், வாகனங்களை கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சியும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

போலீசார்களை போராட்டக்காரர்களும் திருப்பி தாக்கியதால் நேற்று பாரீஸ் நகரமே போர்க்களம் போல் காணப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தவறிய அதிபர் எம்மானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

More News

கஜா புயல் நிவாரண நிதி: அஜித் கொடுத்த தொகை குறித்து தமிழக அரசு அறிவிப்பு

கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு தல அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

பிரபல நடிகர் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்

பிரபல கன்னட நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரிஷ் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்து நடிகர் அம்ரிஷ் நேற்று சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டது.

உலக மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் பெற்று மேரிகோம் சாதனை

கடந்த சில நாட்களாக டெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம்

'திமிரு பிடிச்சவன்' பாணியில் திருவண்ணாமலையில் செயல்பட்ட போலீசார்

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

'ஆயிரத்துள் ஒருவன் 2' எப்போது? செல்வராகவனின் பதில்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'