மகனுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் பூச்சி மருந்தை குடித்த பெற்றோர்கள்

மகனுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதும் அதனை தாங்க முடியாத பெற்றோர்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி அருகே சிறுகனூர் என்ற பகுதியை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் சிங்கப்பூரில் டிரைவராக பணி செய்து கொண்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பு விமானம் மூலம் அவர் சொந்த ஊர் திரும்பினார். வெளிநாட்டில் இருந்து திரும்பிவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் என்ற நிலையில் அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் டிரைவருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதாக கூறிய சுகாதாரத் துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அது மட்டுமின்றி அவருடைய பெற்றோர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தினார்கள்.

தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டது கூட கவலை இல்லை என்றும் ஆனால் தங்களுடைய மகனுக்கு கொரோனா வந்துவிட்டதே என்று அந்த டிரைவரின் பெற்றோர்கள் அழுது புலம்பி கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் மன உளைச்சலில் இருந்து அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்து வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டனர். இதனால் மயங்கி விழுந்த அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மகனுக்கு கொரோனா தொற்று என்பதை தாங்க முடியாமல் பெற்றோர்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

மனநோய்‌ உள்ளவர்களால்‌ மட்டுமே இந்த கொடுமையை செய்ய முடியும்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து கோலிவுட் நடிகர் 

சாத்தான்குளம் விவகாரம் குறித்து கோலிவுட் திரையுலகினர் மிகவும் தீவிரமாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருவது குறித்து அவ்வபோது பார்த்து வருகிறோம்.

ஓய்வுபெற மூன்றே நாட்கள் இருந்த நிலையில் கொரோனாவால் பலியான நர்ஸ்: அதிர்ச்சி தகவல் 

இம்மாதம் 30ஆம் தேதி அதாவது இன்னும் மூன்று நாட்களில் ஓய்வுபெற இருந்த தலைமை நர்ஸ் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லிப்கிஸ் கொடுத்து மோதிரம் மாற்றிய பீட்டர்பால்: வனிதா திருமணத்தின் சுவாரஸ்வமான தகவல்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் ஜூன் 27ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இண்டர்நெட் இல்லை, ஸ்மார்ட்போன் இல்லை: ஸ்பீக்கர் வைத்து பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும், தற்போது ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன

லாட்ஜில் எடுத்த ரகசிய வீடியோ: மயிலாப்பூர் இளம்பெண்ணின் பகீர் புகார்

தன்னை உயிருக்கு உயிராக காதலித்த காதலருடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கி ஜாலியாக இருந்ததாகவும், அப்போது எடுத்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து காதலன் தன்னை மிரட்டுவதாகவும்