'பாபநாசம்' பாணியில் பிணத்தை மறைத்து 7 ஆண்டுகள் தப்பித்த நெல்லை குடும்பம்!

  • IndiaGlitz, [Thursday,September 26 2019]

கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரு கொலையை செய்துவிட்டு அந்த கொலை கடைசி வரைக்கும் போலீசுக்கு தெரியாமல் தப்பித்தனர் என்பதுதான் கதை என்பது அனைவரும் அறிந்ததெ. இந்த நிலையில் இதே பாணியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் தோட்டத்தில் மின்சாரத்தில் சிக்கி பலியான ஒருவரை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு விட்டு கடந்த 7 ஆண்டுகளாக போலீஸின் பிடியில் சிக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது

நெல்லை மாவட்டம் சிவகிரி என்ற பகுதியில் மன்னார் என்பவரை திடீரென காணவில்லை. வயலுக்கு சென்ற அவர் காணாமல் போனது குறித்து அவரது மனைவி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் மாயமான மன்னாரை கண்டுபிடிக்கும்படி சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தது

சிபிஐ பல்வேறு பாணியில் இந்த கொலை வழக்கை விசாரித்த போதிலும் கொலைக்கான எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஏழு ஆண்டுகள் கழித்து அந்த பகுதியில் ஒரு குடும்பத்தினர் பரிகார பூஜை நடத்தி வருவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. மேலும் பரிகார பூஜை நடத்திய தேதியும் மன்னார் காணாமல் போன தேதியும் ஒரே தேதியாக இருந்ததால் உடனடியாக நெல்லைக்கு வந்த சிபிஐ போலீசார் அந்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்

விசாரணை கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அந்த குடும்பத்தினருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் ஒன்றில் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்திருந்ததாகவும் அந்த வேலியில் தற்செயலாக சிக்கி மன்னார் இறந்து விட்டதாகவும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால், சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பதற்கு தண்டனை கிடைக்கும் என்று பயந்து தங்களுடைய காரும்பு தோட்டத்திலேயே மன்னாரை புதைத்துவிட்டதாகவும்வாக்குமூலம் கொடுத்தனர். இதனையடுத்து சிபிஐ போலீசார் அந்த குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

பாபநாசம் பட பாணியில் ஒரு பிணத்தை மறைத்து 7 ஆண்டுகளாக தப்பித்து வந்த அந்த குடும்பத்தினர் கடைசியில் பரிகார பூஜை செய்ததால் மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

என்னால கூச்சமே இல்லாம மேடையில நிக்க முடியாது: கவின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு உடனே வெளியேறலாம் என்ற ஒரு வாய்ப்பை நேற்று பிக்பாஸ் வழங்கியவுடன்

அஜித் பெயரை கூறியதும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற 'தளபதி 64' நாயகி!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது 

விஜய்யை அடுத்து ரஜினியுடன் மோதும் கார்த்திக் 

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் அதே நாளில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படமும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிக்பாஸ் வீட்டில் புரமோஷன் செய்யப்பட்ட பா.ரஞ்சித் திரைப்படம்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். இதில் நேற்று மகத், யாஷிகா நடித்த 'இவன் தான் உத்தமன்' என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது

வெளியேறும் முன் கவின் பேசிய நெகிழ்ச்சியான பேச்சு

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்றே வெளியேறும் நபருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்ற பிக்பாஸ் அறிவிப்பை அடுத்து கவின் வெளியேற முடிவு செய்ததாக இன்றைய மூன்றாவது புரமோவில் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்