தந்தை மகிழ்ச்சி அடைந்த புகைப்படத்தை பகிர்ந்த மகன்.. 'ப்ளூஸ்டார்' நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,March 02 2024]

‘ப்ளூஸ்டார்’ படத்தில் நடித்த நடிகர் தன்னுடைய காட்சி தொலைக்காட்சியில் வரும் போது தனது தந்தை மகிழ்ச்சி அடைந்ததை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார்.

பா.ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்த ‘ப்ளூஸ்டார்’ திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதன் பிறகு தற்போது இந்த படம் அமேசான் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர், இயக்குனர் பாண்டியராஜன் மகன் பிருத்விராஜன் நடித்துள்ள நிலையில் அவரது நடிப்பிற்கு ஏற்கனவே விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அமேசானில் தனது தந்தை பாண்டியராஜன் ‘ப்ளூஸ்டார்’ படத்தை பார்த்த போது, அதில் தன்னுடைய காட்சி வரும்போது அவர் மகிழ்ச்சி அடைந்ததை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகைப்படத்தை பிரித்திவிராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

‘ப்ளூஸ்டார்’ படத்தில் என்னை பார்த்த போது உங்கள் முகத்தில் பூத்த சந்தோசமே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதியாக கருதுகிறேன். உங்களை இந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் பார்க்கும்போது என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உற்சாகத்தை உணர்கிறேன், உங்களை என்றும் நேசிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

சன் டிவியில் புதிய மெகா தொடர்.. தளபதி விஜய் நண்பருடன் இணையும் 'ஆபீஸ்' ஸ்ருதி ராஜ்..!

சன் டிவியில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் மெகா தொடரில் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் ஹீரோவாகவும் 'ஆபீஸ்' சீரியலில் நடித்த ஸ்ருதி ராஜ் நாயகியாகவும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் மகன் ஒரு படத்தையே முடித்துவிட்டாரா? கோலிவுட்டில் இன்னொரு வாரிசு..!

கோலிவுட் திரை உலகை பொருத்தவரை திரை உலக பிரபலங்களின் வாரிசுகள் பலர் அறிமுகம் ஆகி வருகின்றனர் என்பதும் அதில் சிலர் உச்சத்தை அடைந்துள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அயோத்தி ராமர் கோவிலில் 90 வயதில் பரதநாட்டியம் ஆடிய தமிழ் நடிகை.. சிவாஜி, ஜெமினியுடன் நடித்தவர்..!

தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் பல திரைப்படங்கள் நடித்த 90 வயது நடிகை சமீபத்தில் அயோத்தி ராமர் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்திய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நாங்க சந்தோஷத்துல திக்குமுக்காடிட்டோம்: அதுக்கு காரணம் எங்க மருமகள் தான்: அசோக்செல்வன் தாயார்..!

நடிகர் அசோக்செல்வன் தாயார் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது 'நாங்கள் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறோம், எங்களுக்கு பிடித்த காரை எனது  மகன் மற்றும் மருமகள் வாங்கி கொடுத்து

 சிறகடிக்க ஆசை: இதே கேள்வியை முத்து திருப்பி கேட்டால் என்ன ஆகும்? ரோகிணியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் சில திருப்பங்கள் ஏற்பட்டு விறுவிறுப்பாக சென்று