'கதகளி' கதை யாருடையது? பாண்டியராஜ் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,December 31 2015]

பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க -2' திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இயக்கிய அடுத்த படமான 'கதகளி' வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் பாண்டியராஜ், 'சுசீந்திரன் உதவியுடன் நான் விஷாலை சந்தித்து இரண்டு கதையை கூறினேன். ஒன்று குடும்பபாங்கான ஆக்க்ஷன் கதை. மற்றொன்று 'கதகளி' கதை. இரண்டையும் கேட்டுவிட்டு அவர் 'கதகளி' கதையை தேர்வு செய்தார். இந்த கதை நாவலை போல மிகவும் சுவாரசியமாகவும் அருமையாகவும் உள்ளது என்றும் நிச்சயம் இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று விஷால் என்னிடம் கூறினார்.

அதுமட்டுமின்றி இந்த கதை என்னுடைய நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவம். உண்மைக்கதை என்பதால் இந்த படத்தை மக்கள் நிச்சயமாக இதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.. நாயகி கேத்ரீன் தெரசா மீனு குட்டி என்னும் அழகான கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக எனக்கு சிறந்த டீம் அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது' என்று கூறினார்.

மேலும் இந்த படத்தில் இரண்டாம் பாதியில் ஒரு குத்துப்பாட்டை வைத்திருந்ததாகவும், ஆனால் கதையின் வேகத்தை அந்த பாடல் குறைக்கும் என்பதால் அந்த பாடலை எடுத்துவிட்டதாகவும், இரண்டாவது பாதியில் பாடலே இல்லாமல் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.

More News

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு?'

10 எண்றதுக்குள்ள' படத்தை அடுத்து விக்ரம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். 'அரிமாநம்பி' ...

19 பாடகர்கள் பாடிய சென்னை பாடல். விஷால் வெளியிட்டார்

இம்மாத தொடக்கத்தில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சென்னையே தத்தளித்தது....

ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்த ஹாலிவுட் கலைஞர்

2015ஆம் ஆண்டின் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில்...

சூர்யாவை அடுத்து தனுஷின் நன்றி செய்தி

சூர்யா தயாரித்த இரண்டு படங்களின் வெற்றிக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்த செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் சூர்யாவை...

மாதவனின் 'இறுதிச்சுற்று' சென்சார் விபரங்கள்

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...