'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை நடிகைக்கு கிடைத்த புதிய வாய்ப்பு.. ஜீ தமிழ் தொடரில் இணைகிறார்...!

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பான’ பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் முல்லை என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஜீ தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பதும் ஐந்து ஆண்டுகள் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. தற்போது தந்தை மகன்களின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த சீரியலும் முதல் சீசன் போலவே வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகத்தில் முல்லை கேரக்டரில் நடித்த நடிகை லாவண்யாவுக்கு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’நினைத்தாலே இனிக்கும்’ என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்வாதி ஷர்மா மற்றும் ஆனந்த் செல்வன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் ’நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் ஜீ தமிழில் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த தொடரில் தான் நடிகை லாவண்யா இணைந்துள்ளார். ஏற்கனவே இவர் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மட்டுமின்றி ’சிப்பிக்குள் முத்து’ உட்பட சில சீரியல்களில் நடித்துள்ள நிலையில் ’நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் இவர் இணைந்துள்ளதை அடுத்து இந்த சீரியலுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இல்லை.. இயக்குனர் தங்கர்பச்சான் வேதனை..!

மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இல்லை என இயக்குனர் தங்கர்பச்சான் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம்  குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும்

கவுதம் மேனனின் புதிய படைப்பில்  யோகி பாபு ? என்னவாக இருக்கும் ரசிகர்கள் ஆவல் ? !!

"வாரணம் ஆயிரம்", "காக்க காக்க", "மின்னலே", "விண்ணைத்தாண்டி வருவாயா", "வேட்டையாடு விளையாடு" போன்ற காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகளைத் தந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ்

கள்ளச்சாராய மரணம்.. விஜய்யை அடுத்து 2026ல் அரசியலுக்கு வரும் இன்னொரு நடிகரின் கண்டனம்..!

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் குறித்து திரை உலகில் இருந்து முதல் குரல் கொடுத்தவர் தளபதி விஜய் என்பது தெரிந்தது. அந்த வகையில் தளபதி விஜய்

விஜய் மட்டும் தான் குரல் கொடுத்துள்ளார். மற்றவர்களுக்கு ஏன் அச்சம்? ஜெயக்குமார் கேள்வி..!

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் உட்பட ஒரு சிலர் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மற்றவர்கள் ஏன் அச்சப்படுகிறார்கள்

கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.. கமல்ஹாசன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி அரசியல்  தலைவர்கள் கண்டனம்