'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தங்கமயிலுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் படுத்த படுக்கையாய்.. அதிர்ச்சி புகைப்படம்?

  • IndiaGlitz, [Monday,July 01 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தை பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த சீரியலில் பாண்டியன் - கோமதி தம்பதிக்கு சரவணன், செந்தில், கதிர் ஆகிய மூன்று மகன்கள் இருக்கும் நிலையில் இந்த மூன்று மகன்களுக்கு தங்கமயில், மீனா மற்றும் ராஜி ஆகிய மனைவிகள் உள்ளனர் என்பதும் இந்த எட்டு கேரக்டர்களை வைத்து விறுவிறுப்பாக இந்த சீரியல் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சரவணன் மனைவியாக தங்கமயில் கேரக்டரில் நடிக்கும் நடிகை சரண்யா இந்த சீரியலில் என்ட்ரி ஆனதிலிருந்து அவரது வில்லத்தனம் ஆரம்பித்துவிட்டது என்பதும் அதன் பிறகு தான் சீரியலில் திருப்புமுனை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் சரண்யா தனது சமூக வலைத்தளத்தில் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அவரது காலில் அடிபட்டு இருப்பது போன்று அந்த புகைப்படங்களில் உள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பதிவில் தனக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக வலி இருப்பதால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாகவும், தற்போது படிப்படியாக குணமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.