வீடு முழுவதும் தகரத்தை வைத்துமூடி அத்துமீறல்… கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டதால் புறக்கணிப்பு!!!

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

 

சென்னை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் கொரோனா பாதித்த ஒருவரின் வீட்டுக் கதவு, ஜன்னல் போன்ற பகுதிகள் முழுவதும் தகரத்தை வைத்து அடைத்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குரோம்பேட்டை அடுத்த புருஷோத்தமன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியன் வங்கியில் வேலைப்பார்க்கும் ஊழியர் ஹேம்குமார் என்பவருக்கு கடந்த 14 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சிகிச்சை முடிந்து ஹேம்குமார் வீடு திரும்பியதும் அவரது வீட்டின் கதவு ஜன்னல் என அனைத்துப் பகுதிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் தகரத்தை கொண்டு திறக்க முடியாத அளவிற்கு அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வீட்டிற்குள் ஹேம்குமார் மனைவி, குழந்தைகள் என 6 பேர் தவித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு கிளம்பியது. இது மனித உரிமை மீறல் எனவும் சிலர் கருத்துக்கூறத் தொடங்கினர்.

இதையடுத்து பல்லாவரம் மாநகராட்சி ஊழியர்கள் ஹேம்குமார் வீட்டில் பொருத்தப்பட்ட தகரத்தை அகற்றியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநகராட்சி ஊழியர்கள் திறக்க முடியாத அளவிற்கு கதவுகளை மூடவில்லை. மற்றவர்களின் பாதுகாப்பு கருதியே இப்படி செய்தோம் எனவும் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் ஹேம்குமாரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். அத்யாவசியப் பொருட்களை வாங்ககூட வழியில்லாமல் தவித்து வந்தோம் எனத் தெரிவித்து இருக்கிறார். இச்சம்பவத்தால் கதவு, ஜன்னல்களை அடைத்த மாநகராட்சி ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன.

More News

பார்சிலோனா அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு: படு தோல்வி காரணமா?

கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் உலகின் முன்னணி கால்பந்து வீரராக மெஸ்சி திடீரென பார்சிலோனா அணியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக

முதல்முறையாக அரசிடம் சோனுசூட் வைத்த வேண்டுகோள்: செவிசாய்க்குமா அரசு?

இந்த கொரனோ காலத்தில் பாலிவுட்டின் வில்லன் நடிகர் சோனு சூட், இந்திய மக்களின் ஹீரோவாக மனதில் பதிந்தார் என்பது தெரிந்ததே.

பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஐஸ்வர்யாராய்? பரபரப்பு தகவல் 

பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.

காதல் கைவிடாது: அதிசயம் நடக்கும்: பீட்டர்பால் உடல்நிலை குறித்து வனிதா

நடிகை வனிதாவை திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர்பால் நேற்று திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து

பாரில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கையைச் சேர்ந்த பிரபல நடிகை பியுமி ஹன்சமலி ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது