குஜராத் மீது ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

புல்வாமா தாக்குதலுக்கு இன்று அதிகாலை இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையிடம் உள்பட அதன் அனைத்து முகாம்களும் துல்லியமாக தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள் எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி நாடு திரும்பினர்.

இந்தியாவின் இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சற்றுமுன் குஜராத் மீது பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. பாகிஸ்தானின் அந்த ஆளில்லா விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். குஜராத் மாநிலம் கட்ச் அருகே பறந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தாக்குதல் நடத்திய அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தானின் விமானப்படை இந்தியாவை தாக்க முயற்சித்ததாகவும், ஆனால் இந்தியாவின் விமானப்படையை பார்த்து அதிர்ச்சி அடைந்து பின்வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.