close
Choose your channels

பப்ஜி காதலனுக்காக 4 குழந்தைகளுக்கு தாய் செய்யக்கூடிய காரியமா இது? அதிர்ச்சி தகவல்!

Tuesday, July 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆன்லைனில் பப்ஜி விளையாடும்போது சக போட்டியாளருடன் பழக்கம் ஏற்பட்டு அதனால் இளம்பெண் ஒருவர் தன்னுடைய 4 குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த நாட்டை விட்டு சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் கைரக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சீமா குலாம் ஹைதர். சவுதியில் வேலைச்செய்துவரும் பாகிஸ்தான் நபரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக பப்ஜி விளையாடி வந்த இவர் தன்னுடன் விளையாடிய சச்சின் என்பவரை காதலித்து இருக்கிறார்.

இந்நிலையில் 26 வயதான சீமா, சவுதியில் வேலை செய்துவரும் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து டெல்லியிலுள்ள கிரேட்டர் நொய்டாவில் வசித்துவரும் தன்னுடைய பப்ஜி காதலன் சச்சினை சந்திக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். இதனால் இந்தியாவிற்குள் அதிகாரப்பூர்வமாக பயணம் செய்ய முடியாமல் அவர் செய்த காரியம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது சச்சினுடன் சேர்ந்து வாழ விரும்பிய சீமா தனது 4 குழந்தைகளை அழைத்துக்கொண்டு முதலில் துபாய்க்கு விமானம் மூலம் பயணம் செய்திருக்கிறார். அடுத்து அங்கிருந்த நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு மற்றொரு விமானத்தில் பயணம் செய்த அவர் நேபாளத்தின் பொக்ரா பகுதியில் இருந்து டெல்லியிலுள்ள கிரேட்டர் நொய்டாவிற்கு பேருந்தில் வந்து சேர்ந்திருக்கிறார். 4 குழந்தைகளுடன் சீமா பயணம் செய்ததால் எல்லை அதிகாரிகள் இவர்மீது சந்தேகம் அடையவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே 15-20 ஆம் தேதிக்குள் நொய்டாவிற்கு வந்த சீமா, சச்சினை சந்தித்துள்ளார். அதையடுத்து நொய்டாவின் ரபுபுரா பகுதியில் தனியாக வீடெடுத்து ஒன்றாக வசிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் முறைப்படி திருமணம் செய்துகொள்வதற்காக வழக்கறிஞர்களிடம் ஆலோசனையும் நடத்தி இருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் சீமா மீது சந்தேகம் கொண்ட சிலர் காவல் துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி உள்ளனர். இதையடுத்து ஹரியாணா மாநிலத்தின் பல்லப்கர் பகுதியில் பேருந்தில் சென்று கொண்டிருந்த இவர்களை போலீஸார் கைது செய்து விசாரணைக்காக நொய்டாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்த விசாரணையில் பப்ஜி காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து சீமா தனது 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்திய எல்லையைக் கடந்தது தெரியவந்துள்ளது. மேலும் சீமா தன்னுடைய செலவுக்காக பெற்றோர்கள் வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொத்தை விற்றுவிட்டு இந்த காரியத்தை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சட்டவிரோத குற்றத்திற்காக போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பப்ஜி விளையாட்டில் சந்தித்த நபருக்காக இளம்பெண் செய்திருக்கும் இந்தச் செயல் தற்போது பேசுபொருளாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment