பப்ஜி காதலனுக்காக 4 குழந்தைகளுக்கு தாய் செய்யக்கூடிய காரியமா இது? அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,July 04 2023]

ஆன்லைனில் பப்ஜி விளையாடும்போது சக போட்டியாளருடன் பழக்கம் ஏற்பட்டு அதனால் இளம்பெண் ஒருவர் தன்னுடைய 4 குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த நாட்டை விட்டு சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் கைரக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சீமா குலாம் ஹைதர். சவுதியில் வேலைச்செய்துவரும் பாகிஸ்தான் நபரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக பப்ஜி விளையாடி வந்த இவர் தன்னுடன் விளையாடிய சச்சின் என்பவரை காதலித்து இருக்கிறார்.

இந்நிலையில் 26 வயதான சீமா, சவுதியில் வேலை செய்துவரும் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து டெல்லியிலுள்ள கிரேட்டர் நொய்டாவில் வசித்துவரும் தன்னுடைய பப்ஜி காதலன் சச்சினை சந்திக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். இதனால் இந்தியாவிற்குள் அதிகாரப்பூர்வமாக பயணம் செய்ய முடியாமல் அவர் செய்த காரியம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது சச்சினுடன் சேர்ந்து வாழ விரும்பிய சீமா தனது 4 குழந்தைகளை அழைத்துக்கொண்டு முதலில் துபாய்க்கு விமானம் மூலம் பயணம் செய்திருக்கிறார். அடுத்து அங்கிருந்த நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு மற்றொரு விமானத்தில் பயணம் செய்த அவர் நேபாளத்தின் பொக்ரா பகுதியில் இருந்து டெல்லியிலுள்ள கிரேட்டர் நொய்டாவிற்கு பேருந்தில் வந்து சேர்ந்திருக்கிறார். 4 குழந்தைகளுடன் சீமா பயணம் செய்ததால் எல்லை அதிகாரிகள் இவர்மீது சந்தேகம் அடையவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே 15-20 ஆம் தேதிக்குள் நொய்டாவிற்கு வந்த சீமா, சச்சினை சந்தித்துள்ளார். அதையடுத்து நொய்டாவின் ரபுபுரா பகுதியில் தனியாக வீடெடுத்து ஒன்றாக வசிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் முறைப்படி திருமணம் செய்துகொள்வதற்காக வழக்கறிஞர்களிடம் ஆலோசனையும் நடத்தி இருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் சீமா மீது சந்தேகம் கொண்ட சிலர் காவல் துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி உள்ளனர். இதையடுத்து ஹரியாணா மாநிலத்தின் பல்லப்கர் பகுதியில் பேருந்தில் சென்று கொண்டிருந்த இவர்களை போலீஸார் கைது செய்து விசாரணைக்காக நொய்டாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்த விசாரணையில் பப்ஜி காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து சீமா தனது 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்திய எல்லையைக் கடந்தது தெரியவந்துள்ளது. மேலும் சீமா தன்னுடைய செலவுக்காக பெற்றோர்கள் வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொத்தை விற்றுவிட்டு இந்த காரியத்தை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சட்டவிரோத குற்றத்திற்காக போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பப்ஜி விளையாட்டில் சந்தித்த நபருக்காக இளம்பெண் செய்திருக்கும் இந்தச் செயல் தற்போது பேசுபொருளாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

ராம்சரண் தேஜாவை அடுத்து மேலும் ஒரு பிரபலம்.. 'லியோ'வில் என்ன தான் நடக்குது..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படம் ஏற்கனவே ஒரு மல்டி ஸ்டார் படம் என்ற நிலையில் அவ்வப்போது மேலும் சில பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து கொண்டிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும்

நயன்தாராவை இயக்கும் 'லியோ' பிரபலம்.. லேடி சூப்பர் ஸ்டார் காட்டில் மழை..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் மற்றும் இரட்டை குழந்தைகளுக்கு பின்னர் திரைப்படங்களில் நடித்துக் கொள்வதை குறைத்துக் கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

பூஜையுடன் தொடங்குகிறது தனுஷின் அடுத்த படம்..! இதுவரை இல்லாத புதிய லுக்..!

நடிகர் தனுஷ் கடந்த சில மாதங்களாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வந்த 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று அவர் திடீரென தாடி மற்றும் முடியை எடுத்துவிட்டு

இன்று ஜெயம் ரவி அடுத்த படத்தின் பூஜை.. 3 கதாநாயகிகள், இசைப்புயல் இசை என பிரமாண்டம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி 'பொன்னின் செல்வன்' வெற்றிக்கு பின்னர் பிஸியாக நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

'லியோ' படத்தின் ரோலக்ஸ் இந்த மாஸ் நடிகரா? வேற லெவல் சம்பவம் செய்யும் லோகேஷ் கனகராஜ்..!

 லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே படத்தின் இறுதியில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் இருக்கும் என்பதும் 'விக்ரம் ' படத்தில் ரோலக்ஸ் என்ற சூர்யாவின் கேரக்டரை அறிமுகப்படுத்தி அதிர வைத்தார் என்பதையும் பார்த்தோம்.