பத்மாவதி' படத்திற்கு துபாயில் இருந்து நிதி வந்ததா? சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுக்கு படக்குழுவினர் பதில்

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

ரஜபுத்திர ராணி பத்மாவதி கேரக்டரில் தீபிகா படுகோனே நடித்துள்ள 'பத்மாவதி' திரைப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த படத்தில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி வரலாற்றையும் வரலாற்று குறிப்புகளையும் திரித்து கூறியுள்ளதாகவும், ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரமும் திரிக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக, ராஜ்புத் சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்த படம் குறித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியபோது, '
பெரும்பாலான பாலிவுட் படங்களுக்கு துபாயிலிருந்து நிதி வருகிறது. இதனை விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது. திரைப்படங்களில் வரலாறு எப்படித் திரிக்கப்படுகிறது என்பது கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பற்றிய பாலிவுட் படங்களுக்கு துபாயிலிருந்து நிதியளிக்கப்படுகிறது. இதனை விசாரிக்க வேண்டுமென அரசுக்கு நான் கோரிக்கை வைக்கப்போகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள படக்குழுவினர், 'துபாயிலிருந்து நிதியளிக்கப்படுவதாக அவர் கூறுவதை அவரால் நிரூபிக்க முடியுமா? அலாவுதின் கில்ஜியை வில்லனாகவே இந்தப் படத்தில் காண்பித்துள்ளோம். படத்தைப் பார்ப்பதற்கு முன்பே கருத்து சொல்வது தவறு” என்று கூறியுள்ளனர்.

ரஜபுத்திர ராணி பத்மாவதி பாத்திரத்தில் தீபிகா படுகோன், இவரது கணவர் ராவல் ரத்தன் சிங் கேரக்டரில் ஷாகித் கபூர், டெல்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியின் கேரக்டரில் ரன்வீர்சிங் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

 

More News

அந்த குடும்பத்தில் நானும் ஒரு அங்கம்: மம்தாவுக்கு நன்றி கூறிய கமல்

கொல்கத்தாவில் நடைபெறும் 23வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்றார்.

அறம்' படத்தை இதற்காகத்தான் பார்த்தேன்: தொல்.திருமாவளவன் பேட்டி

அறம்' என்ற தலைப்பையும் இயக்குநர் கோபியையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதற்காகவே இந்த படத்தை பார்க்க வந்ததாக கூறிய திருமாவளவன் படம் குறித்து கூறியதாவது:

நயன்தாராவின் 'அறம்' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி சமூக இணணயதளங்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் என முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

நயன்தாராவுக்கு 100க்கு 100 மார்க்: விக்னேஷ்சிவன் ஆச்சரியம்

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருவதால் நயன்தாரா, இயக்குனர் கோபிநயினார் உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

விக்ரம் மகன் துருவ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே