படைவீரன்: திரை முன்னோட்டம்

  • IndiaGlitz, [Monday,January 29 2018]

தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் வில்லனாக அறிமுகமான பிரபல பின்னணி பாடகர் விஜய்யேசுதாஸ் தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் தான் 'படைவீரன்'. இவருடன் இயக்குனர் இமயம் பாரதிராஜா, அகில், அம்ரிதா, உள்பட பல நடித்துள்ள இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்ராஜா இசையமைப்பில் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தில் நடிகர் தனுஷ், 'லோக்கல் சரக்கா பாரின் சரக்கா... ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா.. என்று தொடங்கும் பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,.

இந்த படத்தில் பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய விஜய் யேசுதாஸ், 'இந்த படத்தில் பாரதிராஜா அவர்களுக்கும் எனக்கும் ஒரு துடிப்பான உறவு. அதுக்குள்ள ஒரு கதை இருக்கு. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் லவ் ஸ்டோரி அழகாக அமைந்தாலும்கூட, பாரதிராஜா சாருக்கும் எனக்குமான காட்சிகள் படத்தோட இதயம் மாதிரி. அதோடு நண்பர்கள், காதல் விஷயம்னு இழையோடும். கிராமமும் அது சார்ந்த சில சம்பவங்களும்தான் களம். அதை பக்கா கமர்ஷியல் படமாக்கியிருக்கிறார், இயக்குநர் தனா.

தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும் அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் தான் ‘படைவீரன்’ என்று இயக்குனர் தனா தெரிவித்துள்ளார்.

More News

9 வருடங்களுக்கு முன் இதே ஜனவரி 29ல்...சுசீந்திரனின் மலரும் நினைவுகள்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய முதல் படமான 'வெண்ணிலா கபடிக்குழு கடந்த 2009ஆம் ஆண்டு இதே ஜனவரி 29ல் தான் வெளிவந்தது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை செய்தது.

வரி ஏய்ப்பு விவகாரம் நடிகை அமலாபால் கைதாகி விடுதலை

சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் நடிகை அமலாபால், கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற கோல்டன் கோவிலில் நயன்தாரா

உலகப்புகழ் பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலில் நயன்தாரா சென்று வழிபட்டுள்ளார். கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவில் முன் நிற்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஹிட் தமிழ் ரீமேக் படத்தில் அக்சய்குமார்?

தமிழில் சூப்பர் ஹிட் ஆகி வரும் படங்கள் இந்தியிலும் ரீமேக் ஆகி வரும் நிலையில் தற்போது தமிழில் சூப்பர் ஹிட் ஆனதோடு, ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்த 'காஞ்சனா 2' திரைப்படமும் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

சமுத்திரக்கனியின் 'ஏமாலி' திரைமுன்னோட்டம்

ஏமாளி' என்ற தலைப்பிற்கு பதிலாக 'ஏமாலி' என்ற தலைப்பு வைத்துள்ளது குறித்து பலர் தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும், அதற்கான பதில் படத்தில் இருப்பதாகவும் இயக்குனர் துரை கூறியுள்ளார்.