பாவம் மக்கள், மத்திய அரசு என்ன சொன்னாலும் நம்பிவிடுகிறார்கள்...! ப.சிதம்பரம்.

இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை எங்கேயும் பார்த்ததில்லை என்றும், மத்திய அரசு அதன் திட்டங்கள் பற்றி என்ன சொன்னாலும் அதை நாட்டின் குடிமக்கள் நம்பிவிடுகிறார்கள் என்று கிண்டல் தொனியில் கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். சென்னையில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிதம்பரம், “இந்தியர்களைப் போல ஒரு பாவப்பட்ட மக்களை நான் எங்கும் பார்த்ததில்லை. சில செய்தித்தாள்களில் எதாவது செய்தி வந்தால் அதை அப்படியே நம்பிவிடுகிறோம்,” என்று சொன்ன அவர்,

“இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது மற்றும் 99 சதவிகித குடும்பங்களுக்கு கழிவறை வசதி செய்து தரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சொல்லும் அனைத்துப் புள்ளி விவரங்களையும் நாம் நம்பிவிடுகிறோம்,” என்றார்.

தொடர்ந்து மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டமும் எப்படி செயல்முறைக்கு உகந்ததாக இல்லை என்பது பற்றி விவரித்த சிதம்பரம், “டெல்லியைச் சேர்ந்த ஒரு கார் ஓட்டுநரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. அந்த ஓட்டுநரிடம் நான், உங்கள் ஆயுஷ்மான் கார்டை எடுத்துக் கொண்டு போய் மருத்துவமனையில் காட்டி வேண்டியதைச் செய்து கொள்ள வேண்டியதுதானே என்று சொன்னேன். அவர் இது குறித்து ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஏறி இறங்கியிருக்கிறார். ஒருவருக்கும் இப்படியொரு திட்டம் இருப்பதாகவே தெரியவில்லையாம். ஆனால், ஆயுஷ்மான் திட்டம் இந்தியா முழுவதற்கும் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

எந்தவித நோய்க்கும் ஆயுஷ்மான் திட்டம் மூலம் பணமில்லாமல் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்புகிறோம். பாவம் நாம். செய்தித்தாள்களில் வரும் பல தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாக இருக்கின்றன,” என்று முடித்தார்.

More News

போராட்டங்களுக்கு மத்தியில் நடுஇரவில் அமலுக்கு வந்த #CAA..!

குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான விதிமுறைகள் வகுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

புதை குழியில் சிக்கிக் கொண்ட யானை. போராடி மீட்கும் பொதுமக்கள்..! வீடியோ.

உணவு தேடி கிராமத்தில் புகுந்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை தவறி அங்கிருந்த புதைகுழியில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. 

உக்ரைன் விமான விபத்து எங்களது இராணுவத்தின் தவறால் நிகழ்ந்தது.. ஈரான் ஒப்புதல்.

ஈரானில் இந்த வார தொடக்கத்தில் ராணுவ தளத்திற்கு அருகே சென்ற உக்ரேன் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்திற்கு தாங்களே காரணம் என ஈரான் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. 

கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா: பிரபல நடிகையை பாராட்டிய ஹீரோ!

அஜித் நடித்த 'வாலி', விஜய் நடித்த 'குஷி' உள்பட பல திரைப்படங்களை இயக்கியவரும் மெர்சல், ஸ்பைடர் உள்பட ஒரு சில பல திரைப்படங்களில் நடித்தவருமான எஸ்ஜே சூர்யா

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டால்தான் என் மகள் திருமணம்: 

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர்களுக்கும்