பா.ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Friday,May 20 2016]

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு ஜாக்பாட் பரிசாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படமான 'கபாலி' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒரே காரணத்தால் அவர் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார். இந்த படத்தின் வெற்றி அவரை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்நிலையில் 'கபாலி' படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா தற்போது வெளிநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் சென்னை திரும்பியவுடன் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'S3' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தை முடித்தவுடன் அவர் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழக சட்டமன்ற தேர்தலில் திரை நட்சத்திரங்களின் நிலை என்ன?

கோலிவுட் திரையுலகிற்கும் அரசியலுக்கும் நெருங்கிய உறவு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. கருணாநிதி, எம்.ஜி.ஆர், சிவாஜி...

விஜய்சேதுபதியின் முதல் 2ஆம் பாக திரைப்படம்

விஜய்சேதுபதி, ஸ்வாதி ரெட்டி, நந்திதா, அஸ்வின் நடிப்பில் கோகுல் இயக்கிய 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா'...

தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள முதல்வர்

அம்மாவுக்கு என் பணிவான வாழ்த்துக்கள் : நடிகை நமீதா

சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நடிகை நமிதா, தேர்தலில் அக்கட்சி பெற்ற வெற்றி குறித்து தனது கருத்துக்களை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். நமீதா அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு...

த்ரிஷாவின் 'நாயகி' ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் முன்னணி நாயகியாக இருந்து வரும் த்ரிஷா இன்றைய...