பா ரஞ்சித் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? அப்ப வெற்றிமாறன் படம் என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Thursday,August 22 2024]

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டதாக கூறப்படும் நிலையில் அவருடைய அடுத்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர்தான் நடிகர் சூர்யா.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த செய்தி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ’ஜெர்மன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் ’தங்கலான்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஞானவேல் ராஜா ’ஒரு பெரிய நடிகரின் கால்ஷீட்டோடு வருகிறேன், மீண்டும் நாம் இணைந்து படம் எடுக்கலாம்’ என்று கூறி இருந்தார். அப்போதே அவர் சூர்யா தான் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

பா ரஞ்சித் - சூர்யா இணையும் ஜெர்மன் என்ற திரைப்படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ’சூர்யா 44’ படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் பா ரஞ்சித் படத்தின் பேச்சுவார்த்தையும் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு இலவச டிக்கெட்: நாளை வெளியாகும் படக்குழு அறிவிப்பு..!

அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என நாளை வெளியாகும் திரைப்படத்தின் படக்குழு அறிவித்துள்ளது.

த்ரிஷ்யம் 3ஆம் பாகத்திற்கான ஐடியா பிரபல பாடகியிடம் இருந்து கிடைத்தது: ஜித்து ஜோசப்.

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷ்யம்' மற்றும் 'த்ரிஷ்யம் 2' ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில்

ஏற்கனவே நான் ஒரு CM, இனி நானும் ஒரு PM.. மகன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஷோபா..!

ஏற்கனவே நான் CM, என்றும் இனி நான் PM என்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிக்கு பணம் கொடுத்தாரா நெல்சன் மனைவி.. அவரே அளித்த விளக்கம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலையாளியின் கூட்டாளி என்று கூறப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி பணம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இது

தவெக கொடியேற்றும் விழாவில் விஜய்யின் அப்பா-அம்மா வருகை.. மனைவி குழந்தைகள் வரவில்லையா?

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா ஆகிய