உரிமை கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா? இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம்..!

  • IndiaGlitz, [Wednesday,October 09 2024]

தங்கள் உரிமையை கேட்டு போராடும் தொழிலாளர்களை போராட விடு என இயக்குனர் பா. ரஞ்சித் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் என்ற பகுதியில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், கடந்த சில வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தாமோ அன்பரசன், மற்றும் சி.வி. கணேசன் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பது தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சாம்சங் ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இயக்குனர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து கூறியுள்ளதாவது:

தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலை நிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை.

தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!!!

More News

சின்னத்திரை நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா.. வைரல் புகைப்படம்..!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, ஹிந்தியிலும் சில படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், அதுபோக வெப் தொடர்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

திரைப்படம் போலவே சின்னத்திரையிலும் 3ஆம் பாகம்.. பிரபல நடிகையின் வைரல் பதிவு..!

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட அரண்மனை படத்தின் நான்காம்

பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு? இந்த இருவருக்கு மட்டும் அதிகமா?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. திங்கள் முதல் போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டை

ஆலயங்களிலும் வழிபாடுகளிலும் இணைந்திருக்கும் தெய்வீக இசை

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில், இளம் நாதஸ்வர கலைஞர் ஜெகதீஸ்வரன் அவர்கள் நாதஸ்வர இசையின் அழகைப் பகிர்ந்து கொண்டார்.

'சும்மா அதிருதில்ல.. பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலக்கும் தமிழ் பொண்ணு..!

பிக் பாஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் தமிழ் ஆரம்பித்த அதே நாளில் பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசன் ஆரம்பித்தது