'கபாலி'யில் பஞ்ச் வசனம் ஏன் இல்லை? ரஞ்சித் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, 'மெட்ராஸ்' கலையரசன், 'அட்டக்கத்தி' தினேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறியபோது, 'இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு பஞ்ச் வசனம் கிடையாது என்றும், கதைப்படி இந்த படத்திற்கு பஞ்ச் வசனம் தேவைப்படவில்லை என்றும் கூறினார். மேலும் இந்த படத்தில் ரஜினி சார் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு மிக முக்கிய காரணம், இந்த படத்தின் கேரக்டர் கிட்டத்தட்ட அவருடைய நிஜ வயதையும், தோற்றத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை சிறிதளவு குறைத்துள்ளார்' என்று கூறியுள்ளார்.

சென்னை படப்பிடிப்பு முடிந்தவுடன் 'கபாலி' படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக மலேசியா செல்லவுள்ளனர். மலேசியாவில் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் இந்த படத்தை வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'எங்களுக்கு பிரச்சனை வந்தால் முதலில் நாடுவது கமல்ஹானைத்தான்' - விஷால்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது...

கமலும் நானும் ஒன்றா? சிம்பு

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்...

'புலி' குறித்து அமிதாப் கூறிய த்ரில் கருத்து

விஜய் நடித்த 'புலி' படம் பலவித பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,...

விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில்...

நடிகர் சங்க தேர்தல்: விஜயகாந்த் ஆதரவு யாருக்கு?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணிகளுக்கு தீவிரமாக ...