' சந்திரமுகி 2' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லையா? இயக்குனர் பி.வாசு விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,July 20 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்பட பலர் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது. ’ சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து தற்போது இயக்குநர் பி வாசுவின் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சந்திரமுகி படத்தின் கதையும் ’ சந்திரமுகி 2’ படத்தின் கதையும் வெவ்வேறு என்றும், அதனால் சந்திரமுகி படத்தில் நடித்த ரஜினிகாந்த் உள்பட யாரும் ’ சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் விரைவில் ’ சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் இதில் நடிக்கும் நடிகைகள் குறித்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும் விரைவில் இந்த படத்தின் நாயகி யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்றும் இயக்குநர் பி வாசு தெரிவித்துள்ளார்.

More News

நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா?

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

18 வயதில் அஜித்துடன் நடித்த நடிகையின் 42வது பிறந்த நாள்: வைரல் புகைப்படங்கள்!

18 வயதில் அஜித் நடித்த திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில்

புதிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் "குரங்கு-பி" வைரஸ்…. அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துபோய் இருக்கிறது. இந்நிலையில் சீனாவில்

தம்பதிகளுக்கு..... உடலுறவில் கூடுதல் சுவாரசியம் தரும் விஷயங்கள் என்னென்ன....?

உடலுறவு என்பது மனிதர்கள் தங்களின் உடல் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும்,

பண்ணை வீட்டில் இரவு பார்ட்டி: சென்னையில் 'காதலன்' பட நடிகையிடம் விசாரணை

சென்னை அருகே உள்ள பண்ணை வீடு ஒன்றில் இரவு பார்ட்டி நடத்திய 'காதலன்' படத்தில் நடித்த நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது