close
Choose your channels

பி வாசு குடும்பத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்.. 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு ஒத்திவைக்கப்படுகிறதா?

Saturday, February 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பி வாசு இல்லத்தில் நடந்த சோக நிகழ்வு காரணமாக இன்னும் சில நாட்களுக்கு ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நடக்காது என்று கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் இயக்குனர்களில் ஒருவரான பி வாசு, ரஜினிகாந்த் நடித்த ’மன்னன்’ ’உழைப்பாளி’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். இந்த நிலையில் பி வாசுவின் தந்தை பீதாம்பரம் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் எம்சி சேகர் காலமாகிவிட்டார். வயது முதிர்வு காரணமாக அவர் காலமானதாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 91.

பி வாசு இயக்கிய ’பணக்காரன்’ ’உழைப்பாளி’ ’சேதுபதி ஐபிஎஸ்’ ’வால்டர் வெற்றிவேல்’ ’ரிக்சா மாமா’ ’லவ் பேர்ட்ஸ்’ உள்பட பல படங்களுக்கு இவர் கேமராமேனாக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1986 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களுக்கு இவர் கேமராமேன் ஆக பணிபுரிந்து உள்ளார் என்பதும், சகோதரர் பீதாம்பரத்துடன் இணைந்து ஒரு சில படங்களை தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பி வாசுவின் சித்தப்பா எம்சி சேகர் காலமானதை அடுத்து ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெறாது என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment