26 வருடங்களுக்கு பின் ராஜ்கிரணுடன் மீண்டும் மோதும் பி.வாசு

  • IndiaGlitz, [Wednesday,April 12 2017]

பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இதே நாளில் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த 'பவர்பாண்டி' திரைப்படமும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பிரபு, குஷ்பு நடிப்பில் பி.வாசு இயக்கிய 'சின்னத்தம்பி' திரைப்படமும், ராஜ்கிரண், மீனா நடிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கிய 'என் ராசாவின் மனசில' திரைப்படமும் வெளியானது.
சரியாக 26 வருடங்கள் கழித்து அதே பி.வாசு இயக்கிய 'சிவலிங்கா' படமும், கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் நடிப்பில் அதே ராஜ்கிரண் நடித்த 'பவர்பாண்டி' படமும் தற்போது வெளியாகிறது என்பது ஒரு அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது.
'என் ராசாவின் மனசில' மற்றும் 'சின்னத்தம்பி' ஆகிய இரண்டு படங்களும் கடந்த 91ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அதேபோல் தற்போது 'சிவலிங்கா' மற்றும் 'பவர்பாண்டி' ஆகிய இரு படங்களும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தல' தோனியை அவமதித்த புனே அணி உரிமையாளரின் சகோதரருக்கு சாக்சி கொடுத்த பதிலடி

பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதிலும், அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறையாமல் அதே புகழுடன் உள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அவர் புனே அணியில் விளையாடி வருகிறார்...

மக்கள் திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலும் தாங்காது - மயில்சாமி

திருப்பூரில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அறவழியில் போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் தாக்கியதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் இதுகுறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய தமிழக கவர்னரிடம் திமுக தலைவர்கள் மனு

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களை திமுக தலைவர்கள் இன்று மும்பையில் சற்றுமுன்னர் நேரில் சந்தித்தனர்...

நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், சமீபத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்...

டீ போட்டு கொடுக்காத மனைவியை கத்தரிகோலால் குத்தி கொன்ற கணவன்

அழகாக இல்லாததால் கணவரின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மனைவி குறித்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவியை கத்தரிக்கோலால் குத்தி செய்த கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது...