ஆஸ்கர் நடிகர் வில் ஸ்மித்துக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு பற்றி தெரியுமா? வைரல் தகவல்!

சமீபத்தில் நடிந்து முடிந்த 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச்சென்றுள்ளார் அமெரிக்க நடிகர் வில் ஸ்மித். பல்வேறு ஹாலிவுட் படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு உலகம் முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய ரசிகர்கள் அவரை அதிகம் விரும்புவதற்கான காரணம் குறித்தும் அவருடைய இந்திய வருகை குறித்தும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆஸ்கர் விழாவில் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி ஜடா பிங்கெட்டை கிண்டல் செய்ததற்காக தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை மேடையில் வைத்து அறைந்துவிட்டார். இது பரபரப்பாகி இருக்கும் நிலையில் வில் ஸ்மித் செய்தது சரியா? தவறா? என்பதுபோன்ற பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வில் ஸ்மித்தின் இந்திய வருகை குறித்த தகவல்கள் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

வில் ஸ்மித் இந்தியாவின் ஹரித்துவாருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டே வருகை தந்துள்ளார். அப்போது யோக குரு ஒருவரைச் சந்தித்து குண்டலியோகா பற்றி அறிந்துகொண்ட அவர் மீண்டும் தனது பக்கெட் லிஸ்ட் நிகழ்ச்சிக்காக கடந்த 2019 ஏப்ரலில் வந்திருந்தார். அப்போது மீண்டும் ஹரித்துவார் பகுதியில் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தனது பயணம் குறித்து, இந்தியாவிற்கு பயணம் செய்து வண்ணங்கள், மனிதர்கள் மற்றும் இயற்கை அழகை அனுபவிப்பது, என்னைப் பற்றியும் எனது கலையைப் பற்றியும் உலகத்தின் உண்மைகளைப் பற்றியும் ஒரு புதிய புரிதலை எழுப்பியுள்ளது எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும் மும்பை பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டிக்கொண்ட உற்சாகமாக ஊர் சுற்றிப்பார்த்த அவர், நடிகர் ரன்வீர் கபூருடன் இணைந்து சில நடன அசைவுகளையும் கற்றுக்கொண்டார். அதோடு சினிமா பிரபலமான கரண் ஜோஹரையும் அவர் சந்தித்தார். முதல் முறையாக ஆஸ்கர் விருதுப்பெற்றுள்ள வில் ஸ்மித் ஏற்கனவே இந்தியாவிற்கு வருகைத் தந்திருப்பது பற்றிய இந்தத் தகவல் ரசிகர்கள் பலரை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

More News

ஒரு கட் கூட இல்லாமல் 'யூ' சான்றிதழ்: சிபிராஜ் மகிழ்ச்சி!

தமிழ் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபிராஜ் நடித்துள்ள அடுத்த படத்துக்கு ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் தந்துள்ள

கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா - சமந்தா: காரணம் இதுதான் 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர்

'வலிமை' திரைப்படத்தை பார்த்து தான் முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்தாரா?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 'நம்ம ஆட்டம் இனிமேல் வேற மாதிரி இருக்கும்':  'பீஸ்ட்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகிய 'பீஸ்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

கமலின் 'விக்ரம்' படத்தை வெளியிடும் நிறுவனம்: அட்டகாசமான போஸ்டர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய 'விக்ரம்' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.