கமல், ரஜினிக்கு இணையான நடிகர்கள் ஓபிஎஸ்-ஈபிஎஸ்: கேப்டன் விஜயகாந்த்

  • IndiaGlitz, [Saturday,October 07 2017]

தமிழகத்தின் 25வது ஆளுனராக நேற்று பதவியேற்று கொண்ட பன்வாரிலால் புரோஹித் அவர்களை சற்று முன்னர் நடிகரும் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளேன். தமிழகத்தில் நிலவும் டெங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன். இந்த புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறினார். 

திரையில் ரஜினி, கமல் நடிப்பது போல் ஈபிஎஸ்- ஓபிஎஸ் சேர்ந்து நன்றாக நடிக்கின்றனர். இந்த ஆட்சிக்க்கு மெஜாரிட்டி இல்லை. எனவே இந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி உள்ளதா என்பதை அறிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன்' என்று விஜயகாந்த் கூறினார்.

மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறிய விஜயகாந்த், சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அதனால் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.

More News

கமல் முதலமைச்சராக வாய்ப்பு இல்லை: சாருஹாசன் பேட்டி

கமல், ரஜினி ஆகிய இருவரில் யார் அரசியலில் சாதிப்பார்கள் என்று கூறும்போது கமலுக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றதா? என்ற கேள்விக்கு 'இல்லை' என்று பதில் கூறிய சாருஹாசன்

மீண்டும் முழுநீள நகைச்சுவை படத்தில் கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் நடித்த 'ஹரஹர மகாதேவகி' திரைப்படம் படக்குழுவினர்களே எதிர்பாராத வகையில் அபார வெற்றி இளைஞர்களின் பேராதரவை பெற்று வசூல் மழை பொழிந்து வருகிறது.

கார்த்திக்-கவுதம் கார்த்திக் படத்தில் இணைந்த 2வது நாயகி

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

8 வருடங்கள், 11 படங்களுக்கு பின்னர் விஜய் படத்திற்கு கிடைத்த மாற்றம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டைட்டில் பிரச்சனை நேற்று நீதிமன்றத்தின் மூலம் முடிந்தது மட்டுமின்றி நேற்றே இந்த படம் சென்சார் செய்யப்பட்டது

ஜெய்-அஞ்சலியின் 'பலூன்' சென்சார் தகவல்கள்

'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் ஜெய்-அஞ்சலி மீண்டும் ஜோடியாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பலூன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.