திருமணம் செய்வதாக ஆணை ஏமாற்றிய ஆண்: மேட்ரிமோனியல் நூதன மோசடி

  • IndiaGlitz, [Wednesday,April 10 2019]

சென்னை வடபழனியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது திருமணத்திற்காக பெண் தேடினார். இந்த நிலையில் ஒரு ஆன்லைன் மேட்ரிமோனியில் அவர் தனது பெயர்ரை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த ஹரிணி என்ற பெண், ஆனந்துடன் ஆன்லைனில் அறிமுகமாகி அவரை திருமணம் செய்யவும் சம்மதித்தார். மேலும் தனக்கு ஒருசில குடும்ப பிரச்சனைகள் இருப்பதாகவும், அதற்காக கொஞ்சம் பணம் தேவைப்படுவதாகவும், ஹரிணி கேட்டுள்ளார். இதனை நம்பிய ஆனந்த் ஹரிணியின் வங்கி கணக்கில் 70 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.

இதன்பின்னர் ஹரிணி, ஆனந்தை தொடர்பு கொள்ளவில்லை. ஹரிணியின் மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த ஆனந்த், பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் ஆனந்தை மீண்டும் தொடர்பு கொண்ட ஹரிணி, அவருக்கு திருமணம் ஆனது தெரியாமல் மீண்டும் பண உதவி வேண்டும் என்று கோரியுள்ளார். இம்முறை சுதாரித்து கொண்ட ஆனந்த் பணத்தை நேரில் வந்து வாங்கிகொள்ளுமாறு ஆனந்த் கூறியுள்ளார். ஆனால் ஹரிணி தன்னால் நேரில் வரமுடியாது என்றும், தன்னுடைய சித்தப்பாவை அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பணம் வாங்க வந்தவரை போலீஸ் உதவியுடன் ஆனந்த் பிடித்தார். பிடிபட்டவரிடம் வடபழனி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தபோது பிடிபட்ட நபர் பெரம்பூரை சேர்ந்த செந்தில் என்றும், செல்போன் செயலிகளை பயன்படுத்தி பெண் குரலில் ஆனந்தை ஏமாற்றி பணம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

'தளபதி 63' படத்தில் இணைந்த மற்றொரு நாயகி!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே.

ஷாருக்கான் - அட்லி சந்திப்பு! புதிய படத்தில் இணைவார்களா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று சென்னை அணியுடன் மோதும் போட்டியை நேரில் காண ஷாருக்கான சென்னைக்கு வந்திருந்தார்

சிஎஸ்கே போட்டியை மகன்களுடன் பார்க்க வந்த தனுஷ்!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா! சிஎஸ்கே கிட்ட வாங்காத ஊமக்குத்தா: ஹர்பஜன்சிங் டுவீட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் இருந்தே சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் தமிழில் டுவிட்டுக்களை பதிவு செய்து சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்

எம்ஜிஆர் லதாவை தடவுன மாதிரி..! கஸ்தூரி டுவீட்டுக்கு குவியும் கண்டனங்கள்

நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார் என்பது அனைவரும் அறிந்ததே.