விஜய் டிவியில் மேலும் ஒரு நட்சத்திர காதல் ஜோடியா? காதலை ஒப்புக்கொண்ட நடிகை!

  • IndiaGlitz, [Monday,May 02 2022]

விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கை செட்டில் ஆவது மட்டுமின்றி வாழ்க்கையிலும் செட்டில் ஆயிருக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் பல நட்சத்திர காதல் ஜோடிகளை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆலியா மானசா - சஞ்சீவ் ஜோடி, விஜய் டிவி தொடரில் ஜோடியாகி, பின்னர் ரியல் ஜோடியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அதேபோல் தற்போது மேலும் ஒரு விஜய் டிவி ஜோடி காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. ஆல்யா மானஸா நடித்த ’ராஜா ராணி’ தொடரில் சந்தியா கேரக்டரில் புதியதாக நடிக்க வந்தவர் ரியா. இவருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் விஷாலுக்கும் காதல் என்று கூறப்படுகிறது .

சமீபத்தில் நடைபெற்ற விஜய் விருது வழங்கும் விழாவில் விஷால் விருது வாங்கியபோது ரியாவின் முகத்தில் தெரிந்த காதல், விஜய் டிவியின் கேமரா மூலம் உலகுக்கே தெரிந்தது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ரியாவிடம் ’இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் உங்களை எப்படி கரெக்ட் பண்றது? என்று கேட்க அதற்கு ரியா, ‘நான் ஏற்கனவே கமிட்டட் பிரதர் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் காதலிப்பது உறுதியாகியுள்ள நிலையில் அந்த காதலர் விஷால் தானா? என்பதை கூடிய சீக்கிரம் உறுதி செய்து கொள்ளலாம்.
 

More News

தளபதி விஜய்யை அடுத்து இளம் ஹீரோவுடன் இணையும் சரத்குமார்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரத்குமார், நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த பட ஹீரோ இந்த பிரபல நடிகரா?

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'மாநாடு' மற்றும் 'மன்மதலீலை' ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நாகசைதன்யா நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க உள்ளார்.

25 வருடங்களுக்கு முன்பே விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என கணித்த நடிகர்!

25 வருடங்களுக்கு முன்பே 'விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவார்' என பிரபல நடிகர் ஒருவர் கணித்ததாக அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

ரயில் நிலையத்தில் தூங்கிய கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம்: கணவன் கண்முன் நடந்த கொடூரம்

ஆந்திர மாநிலத்தில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய கர்ப்பிணி பெண் ஒருவர் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஷவர்மா சாப்பிட்ட 18 பள்ளி மாணவர்கள் மயக்கம்: ஒரு மாணவி பரிதாப பலி! 

கேரள மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 18 மாணவ மாணவிகள் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததாகவும் அவர்களில் ஒரு மாணவி பலியானதாகவும்